Thursday, December 10, 2009

ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்.

" தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் " என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்ய பட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.

கமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.

ஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.

இரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.

ஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.

வித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், " காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது." என்று கொள்கையொடு இருப்பவர்.

அர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.

பாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.

தான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.
"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் "என் வானிலே ஒரே வெண்ணிலா " கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.

நட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.

இந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் "நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.

நாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.

அதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.

"நான் உங்க ஜானி இல்லை " என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்."நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much"..

இறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே .." .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .

ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .

சூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு?



கடைக்காரர் கமெண்ட்:
இது எங்க கடைத்தெருவுல 50 ஆவது சிறப்பு பதிவு. வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்க நன்றியை தெரிவித்து கொள்கிறாம். தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்பொடு கேட்டுக்கிறோம்.


டிசம்பர் 12 அன்று பிறந்த நாள் காணும் ரஜினி அவர்களுக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்




பதிவு : இன்பா

11 comments:

ரோஸ்விக் said...

நல்ல படங்கள் எடுத்துக்காட்டுகளாய். தலைவர் எப்போதும் கலக்குவார்.

தங்களது 50-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

. said...

இனிய நண்பா, பாசத்திற்குரிய இன்பா
உனை பற்றி பாடவா ஒரு வெண்பா

வேண்டாம் உரை நடையில் எழுதுகிறேன்.

இன்று ஒரு இனிய நாள். 50வது பதிவு என படிக்கும் போது மனம் நிறைகிறது. தங்கள் வலைப் பதிவு கடைத்தெரு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

50 - - கடைத்தெருவின் பொட்டணங்கள். அத்தனையும் பெட்டகங்கள்.

மணி முத்துக்கள்.

திரைப்படம், நாட்டுப்புற கலை, சமச்சீர் கல்வி, மழை நீர் சேகரிப்பு. மேலே நான் சொன்னது தாங்கள் எழுதிய சமீபத்திய பதிவுகளின் சாராம்சம்.

வெற்று வேட்டுக்களும், வார்த்தை வி நோதங்களும் தவிர்த்து மனித் நேய பாட்டையில் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாமை என வீறு நடை போடுகிறது தங்கள் எழுத்து.

தமிழ் தாயின் செல்லப் பிள்ளை நீங்கள். ஓடியாடும் பிள்ளையை அன்னைக்கும் மிகவும் பிடிக்கும்.

சமூக அக்கறையும் இலக்கிய ஈடுபாடும், இறை சிந்தையும் உள்ள தங்களின் நல் மணம், தமிழ் மணம் நம் இனத்திற்கு தேவை.

தங்கள் தமிழ் பயணம் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. என்ன தவம் செய்தோம் உனை எங்கள் நண்பனாய் காண.

லிவிங்ஸ்டன் said...

mulum malarum padam mathri oru padam nana marupadum pathathilli

Loganathan - Web developer said...

ரஜினி அனைவராலும் ஏற்ககப் படும் நல்ல மனிதர். தலைவர் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே.

பெசொவி said...

//ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை
//
பின்னர் வந்த இயக்குனர்கள் அதிகம் தெரிய வைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இருப்பினும், "நல்லவனுக்கு நல்லவன்", "படிக்காதவன்" போன்ற படங்களிலும், ரஜினியின் ஆற்றல் தெரிய வைக்கப் பட்டது என்பது என் எண்ணம்.

by the way,
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்!

பஹ்ரைன் பாபா said...

தலைவர் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஜானி தான்... இதன் கரு மிக முக்கியமாக.. ஒரு நல்ல பெண்ணுடன் சேரும்போது ஒரு கொள்ளைக்காரன் நல்லவனாகிறான்..ஒரு கேட்ட பெண்ணின் சகவாசத்தினால் ஒரு உழைப்பாளி கொலைகாரனாகிறான்.. இதுதான் கரு.. 12B படமுமே இதிலிருந்து தழுவப்பட்டது போன்று தோன்றும்.. ஒரு கவிதை நயமான படம்.. என் ப்ளாக் இல் நான் முதன் முறையாக விமர்சனம் எழுத நினைத்த படமும் இதுதான்.. நன்றி..

Unknown said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

Unknown said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

Unknown said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

Unknown said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

Unknown said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

 
Follow @kadaitheru