
ரகுவரனுக்கு பின் குணசித்திரம் மற்றும் வில்லன் கேரக்டருக்கு வெகு இயல்பாக பொருந்துகிறார் கிஷோர். எந்த பிரச்சினை என்றாலும் அதை நிதானமாக அணுகும் மாறுபட்ட தாதாவாக "பொல்லாதவன்" , கபடி பயிற்சியாளராக "வெண்ணிலா கபடி குழு" என வெவ்வேறு கேரக்டர்களில் தனது அளவான , யதார்த்த நடிப்பின் மூலம் கலக்கி இருந்தார் கிஷோர்.
கிஷோர் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் "போர்க்களம் " அவரது நடிப்பின் முழு பரிணாமத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

படத்தின் அறிமுக இயக்குநர் பண்டி சரோஜ்குமார். இவரது பெயரை போலவே படமும் வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. 24 வயேதே ஆன ஆந்திராவை சேர்ந்த இளைஞர்.தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர்.
20 வயதில் தான் இயக்கிய குறும்படம் ஒன்றே தனக்கு விசிட்டிங் கார்டாக இருந்தது என்று கூறுகிறார் இயக்குநர்.
வழக்கமாக இல்லாமல் எழுத்து மற்றும் ஷாட் டைரக்ஷன் என குறிப்பிடுகிறார் பண்டி சரோஜ்குமார். ஒவ்வொரு இயக்குனருக்கும் என்று தனித்துவமான காட்சி அமைப்பு பாணி உண்டு என்று கூறும் இவர், இந்த படம் முழுவதும் வித்தியாசமான காட்சி அமைப்புகள் கொண்டதாக இருக்கும் என்கிறார்.
வழக்கமாக அறிமுக இயக்குநர்கள் கூறுவதை போல தோன்றினாலும், clipings பார்க்கும் போது அவர் சொல்வது சரி என்றே தோன்றுகிறது.
பட காட்சிகளில் நாம் காணும் கலர் மற்றும் லைட்டிங் ரொம்ப புதியதாக இருக்கிறது. டைடானிக் படத்தில் பயன்படுத்த பட்ட தொழில்நுட்பமான 100 அடி உயர STRADA என்னும் crane இதில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக பயன் படுத்த பட்டு இருக்கிறது.
ஆட்டோகிராஃப் பாணியில் இந்த படத்தில் மூன்று ஒளிப்பதிவாளர்கள். தேவராஜ், மகேந்திரன் மற்றும் தேவா என்ற மூன்று ஒளி கலைஞர்களில் பெரும் பாலான காட்சிகளில் பங்கு பெற்று இருப்பவர் மகேந்திரன்.
காரைக்குடி, திருச்செந்தூர், தென்காசி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, சென்னை, பாண்டிச்சேரி, பாங்காங் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஒரு வித்தியாசமான வாள் போன்ற ஆயுதங்கள், இறந்த ஒரு மாட்டின் தலை போன்ற காட்சிப்பின்னணி படம் பற்றிய எதிர்பார்பை தருகின்றன. கலை இயக்குநர் ஆனந்தன். படததோகுப்பு அருண்.
பரணி மினரல்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.பாஸ்கர்ராவ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் கிஷோர் முக்கிய வேடத்தில்
நடிக்கிறார்.அவரோடு ஹீரோயின் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்மிதா நடிக்க, லால், சத்யன், பிஜுமேனன், சம்பத், சந்தான பாரதி, ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தி நடிகர் நாயகன் புகழ் டினு ஆனந்த் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.மேலும், பர்மாவை சேர்ந்த அதீஷ்வர் என்பவர் வில்லனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள் நெகடிவ்.
படத்தின் ஹைலைட் சண்டை காட்சிகள். மிக யதார்த்த பாணியில் அமைத்து இருக்கிறார் சூப்பர் சுப்பராயன்.
இந்த படத்தில், தமிழுக்கு முதன் முறையாக இசை அமைக்கிறார் இந்தி இசை அமைப்பாளர் ரோஹித் குல்கார்னி. அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பவர் நா. முத்துகுமார்.
படத்தில் நான்கு பாடல்கள். ஷான்,நிஷா பாடியிருக்கும் "இந்த பூமியில்" , எஸ்.பி.பி சரண் படியிருக்கும் "காற்றோடு ஒரு தூது" போன்ற பாடல்கள் பரவாயில்லை.கே.கே பாடியிருக்கும் "அறன் திறன்" , கார்த்திக் பாடியிருக்கும் "யாரோ இவன் யாரோ" போன்ற பாடல்கள் ஹிரோ புகழ் பாடுவதாக இருந்தாலும், இசை ஸ்டைல் புதுசு.
"சரித்திரத்தில் ஜெய்ப்பவன் வீரன். அந்த சரித்திரத்தையே ஜெய்ப்பவன்மாவீரன் " என தொடங்கும் படத்தின் தீம் ம்யூஸிக், அதன் கம்போஸிங் வெகு அருமை.
ஒரு தனி மனிதன் ஏழு தீய சக்திகளை , தீய விஷயங்களை எதிர்த்து போராடும் களம் இந்த போர்க்களத்தின் கதை என்கிறார் இயக்குநர்.
ஒரு வித்தியாசமான வாள் போன்ற ஆயுதங்கள், இறந்த ஒரு மாட்டின் தலை போன்ற காட்சிப்பின்னணி படம் பற்றிய எதிர்பார்பை தருகின்றன. கலை இயக்குநர் ஆனந்தன். படததோகுப்பு அருண்.
பரணி மினரல்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.பாஸ்கர்ராவ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் கிஷோர் முக்கிய வேடத்தில்
படத்தின் ஹைலைட் சண்டை காட்சிகள். மிக யதார்த்த பாணியில் அமைத்து இருக்கிறார் சூப்பர் சுப்பராயன்.
இந்த படத்தில், தமிழுக்கு முதன் முறையாக இசை அமைக்கிறார் இந்தி இசை அமைப்பாளர் ரோஹித் குல்கார்னி. அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பவர் நா. முத்துகுமார்.
படத்தில் நான்கு பாடல்கள். ஷான்,நிஷா பாடியிருக்கும் "இந்த பூமியில்" , எஸ்.பி.பி சரண் படியிருக்கும் "காற்றோடு ஒரு தூது" போன்ற பாடல்கள் பரவாயில்லை.கே.கே பாடியிருக்கும் "அறன் திறன்" , கார்த்திக் பாடியிருக்கும் "யாரோ இவன் யாரோ" போன்ற பாடல்கள் ஹிரோ புகழ் பாடுவதாக இருந்தாலும், இசை ஸ்டைல் புதுசு.
"சரித்திரத்தில் ஜெய்ப்பவன் வீரன். அந்த சரித்திரத்தையே ஜெய்ப்பவன்மாவீரன் " என தொடங்கும் படத்தின் தீம் ம்யூஸிக், அதன் கம்போஸிங் வெகு அருமை.
ஒரு தனி மனிதன் ஏழு தீய சக்திகளை , தீய விஷயங்களை எதிர்த்து போராடும் களம் இந்த போர்க்களத்தின் கதை என்கிறார் இயக்குநர்.
"நான் ஜெயிச்சா ஞாபகத்துல இருப்பேன். தோத்தா இதயத்துல இருப்பேன்" என்னும் catchyயான வசனம் படத்தின் caption.

இந்த மாதரி பேண்டசி ஆக்க்ஷன் படங்கள் எல்லா தரப்பையும் சென்று அடையுமா என்று தெரியவில்லை. வெண்ணிலா கபடி குழு, நாடோடிகள் ,
வழக்கமான மசாலா அல்லது பார்முலா படங்களை தவிர்த்து ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து புதிய கதை முயற்சிகளோடு வரும் சரோஜ்குமார் போன்ற இளம் இயக்குநர்களை வரவேற்ப்போம்.
பதிவு : இன்பா
2 comments:
ஆனா... டிரைலர்ரே மொக்கையா இருக்கேங்க?
ஆனாலும் வன்முறை வன்முறைதான்... பார்க்கலாம், படம் எப்படி இருக்கிறதென்று...
Post a Comment