Monday, February 25, 2013

ஜென் - ஒரு கவிதை,ஒரு கதை,ஒரு விதை

கவிதை :

நதிக்கரை மணலில் மரங்களின் நிழலில்
நறுமணம் கமழும் புல்வெளிகளிலே
மலைச்சாரல்களின் சரிவில் கூட
மாட்டின் காலடிச்சுவடுகள் கண்டேன்.

சொர்க்கம் நோக்கி செல்வதுபோல கண்டேன்.
சுவடுகள் சற்றே சாய்த்து தெரிந்தன,

எனது எருதின் குளம்படியல்லவா
எனக்கு தெரியாமல் போகுமா....என்ன?

கதை :  நாம் நடந்து செல்லும் பாதையை, நமது காலடிச்சுவடுகள் மூலம் அந்த வழி நல்ல வழியா? அல்லதா? என பிறர் அரிய வாய்ப்பு உண்டு.

நமக்கு நம் வழி பற்றி நன்றாக தெரியும். நன்றாக இருப்பின் நிச்சயம் அது செர்க்கம் நோக்கி செல்லும்.

விதை : எத்துயர்வரினும் நாம் நல்வழி செல்வோம்.


பதிவு :  ஆ.சிதம்பர குருநாதன், திருச்செந்தூர்.

(கடை(த்)தெருவின் விருந்தினர்).

Sunday, February 3, 2013

புடவைக்குள் ஒரு பூங்கொத்து



 
நீ
புடவை கட்டும்பொதுதான்
புரிந்தது
நீயொரு
பூங்கொத்து என்பது.

மூன்று பூக்கள்
மொத்தம் உன்னில்.

கண்ணுக்கு தெரியும்
முகமொரு
பூ.

ஆடையில்
மறைந்திருக்கும்
மற்ற பூக்கள் இரண்டு.

இத்துடன்
கணக்கில் வராமல்
இரவில் மலரும்
இன்னொரு பூவும்
உன்னிடம் உண்டு.

முகப்பூவில் மணம் அதிகம்.
மற்றதில் அதிகமிருப்பது
சுவை

உதிர்வதும் இல்லை.
வாடுவதும் இல்லை.
பறிக்கவும் முடிவதில்லை
உனக்கே உரித்தான
உன் மலர்களை.

உன் கூந்தல் பூக்களும்
செயற்கையாய் தோன்றுகின்றன
உன் பூக்களுக்கு முன்.
செடியிலிருந்து
பறிக்கப்பட்டதால்.

நீ
நடக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உன்
தலையிலிருந்து
உன் மார்பு(பூ)கள்
மீது விழுந்து
உன் காலடியில்
தற்கொலை
செய்துகொள்கின்றன
உன் கூந்தல் பூக்கள்.
 

கவிதை : இன்பா

 
Follow @kadaitheru