Monday, July 23, 2012

கேப்டன் லெட்சுமி - அஞ்சலி

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்றான் பாரதி. தங்களால் போரினையும் நடத்தமுடியும் என நிரூபித்தவர் கேப்டன் லெட்சுமி.

அக்டோபர் 24, 1914 ஆம் வருடம், அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை S.சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர், தாய் அம்மு அவர்கள் கேரளாவை சேர்ந்த சமுகசேவகர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்.

ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, 1938 ஆம் வருடம் சென்னை மருத்துவகல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின் சிங்கப்பூர் சென்று, அங்கு வாழும் ஏழை இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவமையம் அமைத்தார். 1942 ஆம் வருடம் சிங்கப்பூர், ஜப்பான்வசம் வந்ததும், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சைகள் செய்தார்.

அப்போதுதான் அவர் வாழ்கையின் முக்கியமான திருப்பமான சம்பவம் நடந்தது. ஜூலை 2, 1943 ஆம் வருடம் சிங்கப்பூர் வந்த நேதாஜி அவர்கள் பெண்களுக்கான படைபிரிவை ஜான்சி ராணியின் பெயரால் தொடங்கவிருப்பதாக அறிவிக்க, கணமும் தாமதிக்காமல் அதில் இணைந்தார் லெட்சுமி. ராணுவ சேவைகளோடு, மருத்துவ சேவைகளையும் கவனித்தார். தனது சிறப்பான பணிகளால் விரைவில் ஜான்சிராணி படைபிரிவின் தலைமை பொறுப்பை ஏற்று கேப்டன் லெட்சுமி ஆனார்

1946, மார்ச் 4 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர், நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் நமது அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு போட்டியிட்டு, தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் பிரேம்குமரோடு கான்பூரில் செட்டில் ஆகி, ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அடுப்புஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் லெட்சுமி சாதித்துக்காட்டிஇருக்கிறார். இவரைபோன்று 'வெளிச்சத்திற்கு' வராமல் 'இருட்டில்' இருக்கும் பாரதி கண்ட புதுமைபெண்கள் எத்தனயோ?



இன்று (23-7-12 ) இயற்கை எய்திய கேப்டன் லெட்சுமி அவர்களுக்கு எங்களின் வீர வணக்கங்கள்.

ஜெய்ஹிந்த்.



-இன்பா

Sunday, July 8, 2012

'சாணக்யன்' தந்திரம்


மனிதன் தனியாகவே பிறந்தான். தனியாக இறக்கின்றான். நல்லதோ, கெட்ட கர்மவினையோ தனியாக அனுபவிக்கிறான். இறுதியில் சொர்க்கமோ, நரகமோ கடைசியில் தனியாகவே செல்கிறான்.

ஒரு மனிதனின் உயர்வு அவனது செய்கையால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. அவனது பிற்ப்பால் அல்ல.

ஒரு மனிதன் எப்பொதும் அதீத நேர்மையுடன் இருக்ககூடாது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.அதுபோலவே நேர்மையான மனிதனே முதலில் தண்டிக்கபடுகிறான்.

ஒரு வேலையை தொடங்கும் முன், மூன்று கேள்விகளை உன்னுள் கேள்.

   1..இதை நான் ஏன் செய்கிறேன்?
   2. இதன் விளைவு என்ன?
   3. தற்பொது இதில் நான் வெற்றிபெறுவேனா?

இந்த கேள்விகளுக்கு ஆழ்ந்த சிந்தனைக்குபின் உண்மையாகவும், திருப்திகரமாகவும் விடைகள் உன்னுள் கிடைத்தப்பின், காரியத்தை செய்யத் தொடங்கு.

முட்டாளுக்கு புத்தகம் அறிவைத் தரும் என்பது கண்ணாடி குருடனுக்கு பார்வையை தரும் என்பதை போலாகும்.

கல்வியே உண்மையான நண்பன். கற்றவன் எங்கும் மதிக்கபடுகிறான். கற்றவனின் அழகு இளமை அழகைவிட மேலாக காட்டுகிறது.

பாம்பு தற்போது விஷமற்றதாக இருக்கலாம். ஆனாலும், அது எப்பொதாவது விஷத்தை கக்கும் என்பதில் அவதானமாக இரு.

கடவுள் சிலைகளில் இல்லை. உன்னுள் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு கடவுளே. அதனை உள்ளிருந்து உருவாக்கும் ஆத்மனே கோயில்.

 
Follow @kadaitheru