Wednesday, November 7, 2012

Love Anthem 2 - 'லவ்' பண்ணலாமா? வேணாமா?

கல்விக்கடனுக்கு
அலையும்
கிராமத்து
ஏழை மாணவனாய்..
உன்
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கிறேன்.

நள்ளிரவில்
யாருக்கும் தெரியாமல்
உயரும்
பெட்ரோல் விலை போல
ரகசியமாய்
என்னை பார்க்கிறாய் நீ.

பத்துமணி நேர
மின்வெட்டை விட
பத்து நொடி வரும்
உன்
கண்வெட்டுதான்
அதிகம்
வியர்க்கவைக்கிறது
என்னை.

தேங்கிய மழைநீரில்
தத்தளிக்கும்
தெருவாக்கிவிடுகிறது
என் மனதை
அது.

மக்கள் நலனுக்கு
அரசு போடும் திட்டங்கள்.
உனனை நினைத்து
நான் எழுதிவைத்திருக்கும்
காதல் கடிதங்கள்.
இரண்டும் ஏனோ
இலக்கை எட்டுவதேயில்லை.

தனியார் பள்ளிக்கட்டணம்
குறைவது எப்பொழுது?
தனிமையில் நாம்
சந்திப்பது எப்பொழுது?

ஊழலை
ஒப்புக்கொள்ளாத
அரசியல்வாதி போலவே
என் மீதான
காதலை
ஒப்புக்கொள்வதில்லை நீ.

'சிறந்த மௌனம்'
என்னும் தலைப்பில்
போட்டி வைத்தால்
முதலிடம் உனக்கே.
இரண்டாமிடமே
இந்திய பிரதமருக்கு.

மணமேடையில்
இல்லாவிட்டாலும்
மருத்துவமனையிலாவது
சேர்த்துவைத்து
நம் பிரிவுக்கு
'சங்கு' ஊதுமா
'டெங்கு'?

கவிதை - இன்பா

Sunday, October 14, 2012

'கரண்ட்கம்பியில்' காக்கைகள்

உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற பொதிலும்
அச்சமில்லாதவர்கள்
நாங்கள்.

கனவுகளில் மட்டுமே
சாத்தியம் எங்களுக்கு.
சொந்தக்காலில்
நிற்குமொரு வாழ்க்கை

'கரண்ட் கம்பி'களில்
உட்காரும்
காக்கைக் கூட்டம்.
கட்டியிருக்கும்
மூங்கில் கழிகளில்
நாங்கள்.

எங்களின்
பிரிக்கமுடியாத
ஆறாம் விரலானது
'பெயிண்ட் ப்ரஷ்'

நிறமாற்று திறன்
பச்சோந்திகளுக்கு மட்டுமல்ல.
எங்களுக்கும்தான்.

உற்றுப் பார்த்தால்
மட்டுமே தெரியும்.
சிமெண்ட் கலவைக்கும்
எங்கள் 'கலரு'க்கும்
உள்ள வேறுபாடு.

கட்டங்களுக்காக
கொள்ளை போகும்
ஆற்றுமண்லொடு
குழைக்கபடுகிறது
எங்களின் வியர்வை.

நாங்களும்
'மகாத்மா'க்களே.
எப்பொதும்
இடுப்புத்துணி மட்டுமே
அணிவதால்.

பணக்கார பருந்துகளுக்காக
உயர..உயர
பறக்கும்
ஊர்க்குருவிகள்
நாங்கள்

அடுக்கிவைக்கும்
ஒவ்வொரு செங்கல்லிலும்..
திட்டம்போட்டு
எங்கள் பெயரை
எழுதிவைத்தவன் யார்?

கவிதை : இன்பா

Saturday, October 6, 2012

பார்வை('கள்')

என்னதான்
'தோழி' என்று
விளித்தாலும்
அவள்
கண்களை தாண்டியும்
செல்கிறது.

ஜன்னலோரப் பயணங்களில்
கடந்துபோகும் நீர்நிலைகளில்
குளிக்கும் பெண்களை
தேடுகிறது
கொஞ்சமும் உறுத்தலில்லாமல்.


கோவிலுக்கு சென்றாலும்
அம்மன் சிலையை
'அளக்கிறது'.

கடைகளின் விளம்பரத்தாள்களில்
தொங்கும்
நடிகைகளின் கவர்ச்சியே
ஜனரஞ்சக பத்திரிக்கைகளை
வாங்குவதை தீர்மானிக்கிறது.

இலக்கிய பத்திரிக்கையாக
இருந்தாலும்
முதலில் பார்ப்பது
காமம் பேசும் கவிதைகளைத்தான்.

இணையத்தில்
எதை தேடினாலும்
முடிவது
'இதில்'தான்.


எதெச்சையாய் குழந்தை
எதிர்சீட்டு பெண்ணின்
'தலைப்பை' விலக்கும்போதும்
விட்டு விலகுவதிலை
என் பார்வை.

பார்வைகளை
பார்வைக்'கள்' என
மாற்றியது எது?

மனமொரு குரங்கு
மெய்ஞானம்
கட்டிப்போடும் விலங்கு.

எதைக்கொண்டு
கட்டுவது
என் பார்வையை,

கவிதை: இன்பா

Tuesday, October 2, 2012

"சேவாக் ஒரு பாகிஸ்தானி" - கம்ரான் அப்பாஸியின் கலக்கல் கமெண்ட்


"சேவாக், பாகிஸ்தானில் பிறந்து, பின்பு இந்தியாவுக்கு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்." என்று சேவாக்கின் ஆட்டத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் எழுதினார் கமரான் அப்பாஸி.

(Kamran Abbasi ‏@KamranAbbasi  I'm sure Sehwag was born in Pakistan and smuggled over the border)

இவர், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கிரிக்கெட் விமர்சகர். விஸ்டன் பத்திரிக்கையில் பங்கு பெற்ற முதல் ஆசிய எழுத்தாளர். கூடுதலாக இவர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

20 - 20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி குறித்து அவர் ஆங்கிலத்தில் எழுதிய பிரபல கட்டுரை, அப்படியே இங்கே...

The heat was high in Colombo but Pakistan froze. In a game in which they had too less to lose, and India started poorly, Pakistan were never relaxed. India, as has become the way in these encounters, played with self-belief that once belonged to Pakistan when facing their neighbours. The psychological balance shifted many years ago—it might have been Sachin Tendulkar’s six off Shoaib Akhtar in the 2003 World Cup that was the trigger—and India look unlikely to give it up.

Why should they? Such booty has to be seized, it is rarely surrendered. In this game, where the strength of India’s bowling seemed innocuous and the bounty of psychological advantage was for looting, Pakistan were positive on paper but inhibited in execution. Supporters rarely forgive defeat to India. They resent it more when a white flag is raised upon first sight of the enemy.

Pakistan’s plan was a brave one. Win the toss and bat first, put India’s bowlers to the sword. Promote Shahid Afridi to number 3, where he can cause maximum damage early in an innings and reacquaint himself with Irfan Pathan. Back your spinners, even young Raza Hasan, to outfox India’s superior batsmen. But these were empty gestures, orders carried out with a reluctant heart. Captain Mohammad Hafeez, a professor with a weighty assignment, was a victim of the moment. When a leader should lead, Hafeez was dragged to oblivion by the gravity of the situation.

Defence rarely suits Pakistan's nature, yet Hafeez took backward steps at two critical moments. First, his decision to prod and poke his way through the Powerplay overs killed the tempo of Pakistan’s innings. India’s bowlers were decent, nothing more. The captain’s reserve sent the wrong signal to his men. It spoke of nervousness, a fear of the occasion.

The innings never recovered and left India with almost nothing to do for victory. Still, Pakistan’s only chance was to attack. Hafeez began brightly, posting a slip and encouraging his men. But too quickly Pakistan were on the defensive again. Close catchers were disposed of within the Powerplay when Pakistan required wickets. The field was dispersed upon the end of the Powerplay when Pakistan could least afford such easy runs.
Hafeez’s body language and decision-making was of a man resigned to the punishment of Virat Kohli’s blade. The Professor was calculating run rates, scheming for future examinations, while Kohli dealt expertly with the here and now. Such high art was unnecessary from Kohli, Pakistan weren’t a pretty picture in this match. It was a collective failure, an abject surrender.

The worry for Dav Whatmore will be that his team’s performance level has dropped with each game. The players need to be re-energised and re-focussed. Inhibition against India must give way to aggression against Australia. Hafeez must come out of his shell, put away his introspection. And some hard decisions are required. Yasir Arafat’s all-round struggles should give way to Abdul Razzaq. The batting order requires a dependable batsman for others to play around, which means Asad Shafiq in place of Shoaib Malik or Imran Nazir. The final necessity is for Umar Akmal, Pakistan’s most assured batsman in this World Cup, to bat up the order.

All these changes are unlikely but Pakistan must act because such lame surrenders, as the one against India, are echoes of a troubled age.


Sunday, September 30, 2012

திருமதி.காந்தி

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற வாசகத்துக்கு உதாரணமாக மகாத்மா, தேசபிதா என்று அறியப்பட்ட காந்தி அவர்களின் வாழ்க்கைக்கு பின்னால் இருந்தார் கஸ்தூரிபா. 'பா' என்று காந்தி அன்புடன் அழைத்த கஸ்தூரிபா, பொறுமைக்கு, சகிப்புதன்மைக்கு உறைவிடமாய் வாழும் இந்திய பெண்களுக்கு ஒரு உருவகம்.

ஏப்ரல் 11, 1869 ஆம் வருடம், குஜராத் மாநிலம் காந்தி பிறந்த அதே போர்பந்தரில், கோகுலதாஸ் என்ற தொழிலதிபருக்கு மகளாக பிறந்தார் கஸ்தூரிபா. 
 
மிகவும் ஆச்சாரமான, கட்டுப்பாடுகள் நிறைந்த வைஷ்ணவ குடும்பம் அவருடையது. 1883 ஆம் வருடம் காந்தியை அவர் திருமணம் முடித்தபோது அவர் வயது 13 மட்டுமே. படிப்பறிவோ, பட்டறிவோ இல்லாத மழலை பருவம் தாண்டாத, வெளியுலகம் சிறிதும் அறியாதவராய் இருந்தார் அவர். அவருக்கு காந்தி அவர்களே ஆசிரியராய் இருந்து ஆங்கிலம்,சமஸ்கிரதம் உட்பட்ட கல்வியை போதித்தார். காந்தி அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன் சென்றபோது, தனது முதல் மகன் ஹரிலால் பிரசவத்தின் பொருட்டு, இந்தியாவில் இருந்தார் கஸ்தூரிபா.

1906 ஆம் வருடம் காந்தி அவர்கள், உடலுறவை முற்றிலும் புறக்கணித்து, பிரம்மச்சரியத்தை தனது கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டபோது, அதை முழு மனதோடு ஒப்புக்கொண்டார் கஸ்தூரிபா. சிறுவயது முதலே ஊறிப்போன தனது ஆச்சார, அனுஷ்டங்களை துறந்து காந்தி அவர்களோடு சாதி வேறுபாடுகளை பாராட்டாத ஆஸ்ரமங்களில் தங்கினார்.

1897 ஆம் வருடம் காந்தியுடன் தென்னாப்ப்ரிக்கவுக்கு பயணமானார். 1913 ஆம் வருடம் தென் ஆப்ரிக்காவிலுள்ள இந்தியர்களுக்காக போராடி காந்தி கைதானபோது கஸ்தூரிபாவும் ஜெயிலுக்குச் சென்றார்.

அங்குள்ள இந்தியர்கள் கஸ்தூரிபாவுக்கு 52 பவுன் நெக்லஸ் ஒன்றை பரிசாகத் தந்தனர். அதை விற்று கிடைத்த பணத்தில், ஒரு டிரஸ்ட் அமைத்தார். அந்தப் பணத்தை அங்குள்ள மக்களுக்கு உதவும்படி செய்தார்.

இந்தியா திரும்பியதும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு காந்தி சிறை சென்றதைப் பார்த்தார். விஷயம்புரியாவிட்டாலும்கூட, "என் கணவர் ஏதோ நல்ல விஷயத்துக்காக ஜெயிலுக்குப் போகிறார். நானும் அதுபோலசெல்கிறேன்' எனக்கூறி, மகளிர் அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று ஜெயிலுக்குப் போனார்.

ஒருமுறை ஜெயிலில் இருந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், "வெள்ளையவர்களிடமிருந்து நாட்டை மீட்க பெண்களும் காங்கிரசுடன் இணைந்து போராட வேண்டும். கதராடை அணிந்தால் பொருளாதாரப் பிரச்னை தீரும். நெசவு வேலையில் பெண்கள் முக்கியமாக ஈடுபட வேண்டும். நம் நாட்டு துணி வியாபாரிகள் வெளிநாட்டு துணிகளை விற்கக் கூடாது' என்று கூறியிருந்தார்.இந்தியா முழுவதும் எதிரொலித்தது இந்த போர்குரல். உடனே கதராடையை ஏற்று கொண்டனர் மக்கள்.

அவருக்கும், காந்திக்கும் இடையே நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம்.

உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கு முன், வழக்கம் போல் காந்தி தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இந்த யாத்திரையின் போது காசிக்குச் சென்று ஸ்ரீ பிரகாசா என்பவர் வீட்டில் தங்கினார். அங்கிருந்து கிளம்பும்போது அக்குடும்பத்திலுள்ள எல்லோரும் காந்திஜியை வழியனுப்ப ஒன்று கூடினர். அவர்களில் ஸ்ரீ பிரகாசாவின் தாயாரும் ஒருவர். திடீரென்று அவள் காந்திஜியிடம் ‘மஹாத்மாஜீ, தாங்கள் ‘பா’விடம் மனம் நோகும்படி நடந்து கொள்ளுகிறீர்கள்’ என்றாள்.

இதற்க்கு சில நாட்களுக்கு முன் கஸ்தூரிபா செய்த சிறு தவறுக்காக ‘என் வருத்தம்; என் வெட்கம்’ என்ற உணர்ச்சி மிக்க கட்டுரையைக் காந்திஜி எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடுமையான வார்த்தைகளால் கஸ்தூரிபாவைக் கண்டனம் செய்திருந்தார். யாரோ ஒருவர் கஸ்தூரிபாவிடம் ரூபாய் நான்கு நன்கொடையாக்க் கொடுத்திருக்கிறார். அதை உரிய நேரத்தில் ஆசிரமத்தின் கஜானாவில் ‘பா’ சேர்க்க முடியாமற் போயிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பலருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.

இதனை மனதில் எண்ணிக்கொண்டுதான் ஸ்ரீ பிரகாசாவின் தாயார் காந்திஜியிடம் மேற்சொன்ன சொற்களைக் கூறினாள். ஆனால் காந்திஜியோ முற்றும் துறந்த முனிவராயிற்றே; சிரித்துக்கொண்டே, ‘பா’வுக்கு நான் சாப்பாடு போடுகிறேன், உடுக்க துணிமணி கொடுக்கிறேன். அவளை நான் கவனித்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் குறை கூறுகிறாளா? என்று கேட்டார்.

‘நான் ‘பா’வுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அவள் வாங்கிக்கொள்வதில்லை. வாங்க அனுமதியுங்கள்’ என்றார் அம்மையார்.

மகாத்மா இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லை, இல்லை, ரூபாய் ‘பா’வுக்குக் கொடுக்கவேண்டாம், ஸ்ரீபிரகாசாவிடம் கொடுங்கள். ஏனென்றால் அவர் எனக்காக்க் கஷ்டப்பட்டு நிதிசேர்த்துக் கொண்டிருக்கிறார். தாங்கள் கொடுக்கவிரும்பும் பணத்தை அந்த நிதிக்கே கொடுத்துவிடுங்கள்’ என்றார். கடைசியில் அம்மையார் ‘பா’வுக்கு கொண்டுவந்திருந்த காசை அந்த நிதிக்கே கொடுத்துவிட்டார்.

1944, பிப்ரவரி 22, தனது 74 வது வயதில், மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார் கஸ்தூரிபா. காந்தி இறந்தபோது, "ஹே ராம்' என்று சொன்னதைபோன்று. அன்னை கஸ்தூரிபா இறப்பதற்கு முன் "ஆண்டவனே அபயம்.கருணை வேண்டி இறைஞ்சுகிறேன்' என்றார்.

கொள்கைகளுக்காக வாழ்ந்த மனிதர்களுடன், அவர்கள் நலனே தனது கொள்கை என அனுசரித்து, தியாகமனப்பான்மையுடன் வாழ்ந்த திருமதி. காந்தி மற்றும் திருமதி.பாரதி போன்ற பாரத தேசத்தின் பெண்மணிகள் காந்தி, பாரதியைவிடவும் போற்றுதற்குரியவர்கள்தானே?.

காந்தியின் இன்றைய முக்கியத்துவம் என்ன ?

காந்தி ஒரு ஆளுமை. ஒரு சித்தாந்தம் அல்ல. அந்த மனிதரை நாம் அறியும் போது நமது கண்கள் இந்த கலாச்சாரத்தையும் இங்குள்ள வாழ்வையும் வேறு விதமாகப் பார்க்க ஆரம்பிக்கும். அது மிக முக்கியமானது. நமது கண்கள் இப்போது நம்முடையவையல்ல. அவற்றில் உள்ள ரத்தமும் சதையும் மட்டும்தான் நம்முடையவை. பார்வை இரவல் வாங்கப்பட்டது. இரவல் பார்வையும் இரவல் குரலுமாக எவரும் இந்நாட்டு மக்களை அணுகி விட முடியாது
- ஜெயகாந்தன்:

அக்டோபர் 2, காந்தி பிறந்த தினம்.

வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்ம! நீ வாழ்க! வாழ்க!
- பாரதியார்.


தாக்கமும், ஆக்கமும்
இன்பா
(இது கடை(த்)தெருவின் முதல் பதிவு, இன்று மறுபதிப்பில்).

Thursday, September 27, 2012

'பாரத ரத்னா' டாக்டர் கலைஞர் - ஒரு இலக்கிய விளக்கம்

செய்தி :  நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதிற்கு திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே விண்ணப்பித்திருக்கிறது.
 
ஒரு இலக்கிய விளக்கம்(!)
 
சிலப்பதிகாரத்தில்
வழக்குரைக் காதை.
ஒரு
சீர்மிகு காட்சி.

"யாமுடைச் சிலம்பு
முத்துடை அரியே" யென
காற்சிலம்பை
கழட்டிவீசுகிறாள்
கண்ணகி.

மன்னவன்
வாய் முதல்
தெரித்தது
சிலம்பின் மணிகள்.

இக்காட்சியில்
கண்ணகி வேடத்தில்
நமிதா நடித்தால்
எப்படி இருக்கும்??

அப்படித்தான்
இருக்கும்.
கருணாநிதிக்கு
பாரத ரத்னா.

-இன்பா

Sunday, September 16, 2012

ஒரு 'சாரா' கவிதை

செய்தி :   21 வயது நிரம்பிய Victoria's Secret மொடலான Sara Sampaio நேற்றையதினம் மியாமி ஹோட்டலில் குளித்துக் கொண்டிருந்தபோது அவரின் மேற்பாகத்தின் முடிச்சு அவிழ்ந்து ஒருகணம் டாப்லெஸ் ஆகிவிட்டார்.
இதுக்கென்றே காத்திருந்த கமராகாரர்கள் சட்டென்று கிளிக்கிவிட, அப்போதுதான் கைகள் இருப்பது நினைவுக்கு வந்தது போன்று கைகளால் மறைத்துவிட்டார்.


உன் கைகளுக்கும்
கேமரா கண்களுக்கும்
இடையே போட்டி.

வென்றது
உன் கைகள்.

ஆனாலும்
தோற்கவில்லை
கேமரா.


-இன்பா

Friday, August 31, 2012

"முகமூடி" - கிழிந்தது

"கிராமத்தில் இருந்து பெட்டியை தூக்கிக்கொண்டு உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்து விடுகிறார்கள். சினிமாவுக்கு வருவதற்க்கு இலக்கிய அறிவும், உலக சினிமாவும் தெரிந்து இருக்க வேண்டும்" என்று ஒரு முறை கூறினார் மிஷ்கின்.

"எல்லாம் தெரிந்தவர்கள் போன்று ப்ளாக்கில் சினிமாவை ஆளாளுக்கு விமர்சிக்கிறார்கள்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு முன்பே கிராமத்தில் இருந்து வந்து சாதித்தவர்கள் இருக்கிறாரிகள். இன்றும் நல்ல இயக்குனர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சசிகுமார்,சமுத்திரகனி உட்பட பல இயக்குனர்கள் ஏன் கே.பாலச்சந்தர், கமல் கூட கிராம பின்புலம் கொண்டவர்கள்தான்.

இவர்களுக்கு மத்தியில், இதுவரை கொரிய மற்றும் ஜப்பானிய மொழி படங்களை அப்படியே 'ஈ அடிச்சான் காப்பி' அடித்து 'பெயர்' வாங்கிய தமிழ் நாட்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் "முகமூடி" படத்தை ஹாலிவுட்டோ - சீனோ படம் என்று கூறலாம். பேட்மேன் மற்றும் ஜாக்கிசான்,ப்ருஸ் லீ நடித்த படங்கள் என ஒரு டெஸ்ட் டியுப்பில் போட்டு 'கலக்கி' இருக்கிறார் மிஷ்கின்.

விமர்சனம் எழுதுமளவுக்கு கூட படத்தில் ஒன்றும் இல்லை. படத்தின் 'ஒவர் சீன்' போட்ட பாடல் வெளியிட்டுவிழா அதன் பின் வெளியிடப்பட்ட பேட்மேன் 2 பாணி ட்ரைலர் இவற்றை பார்க்கும்பொதே ரிசல்ட் ஒரளவுக்கு தெரிந்து விட்டாலும், கிராமத்தில் இருந்து இயக்குனர் கனவுகளோடு வரும் இளைஞ்சர்களை கேவலமா பேசிய மிஷ்கினை விமர்சிக்கவே படம் பார்த்தேன்.

ஜீவாவின் நடிப்பு திறமையையும், ஒளிப்பதிவாளர் சத்யா போன்ற டெக்னிசியனகளின் உழைப்பையும் எப்படி வீணடிக்கலாம் என்று மிஷ்கின் ஒரு வகுப்பே நடத்தலாம்.

உதவி இயக்குனராக வர உலக சினிமா அறிவு முக்கியம் என்று மிஷ்கின் சொன்னதன் அரத்தம்...அப்பொதுதான் அவற்றை காப்பி அடிக்க எளிதாக இருக்கும் என்பதே என்பது அவரது படங்களை பார்க்கும்பொது நமக்கு புரிகிறது.

இந்த படத்தின் 'மெகா' தோல்விக்கு பிறகாவது, கிராமத்தில் இருந்து வந்து இயல்பான படங்கள் மூலம் சாதித்து கொண்டிருக்கும் 'களவானி' சற்குணம், 'தென் மேற்கு பருவகாற்று" சீனு ராமசாமி, சமிபத்திய 'அட்டகத்தி' ரஞ்சித், 'மதுபான கடை' கமலகண்ணன் போன்றவர்களிடம் பாடம் கற்க வேண்டும்.

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் எல்லாம் டைட்டில் கார்டில் மட்டுமே இருக்கிறது.

"முகமூடி" - மிஷ்கினின் அகம்பாவம் மிகுந்த 'அறிவு ஜீவி' முகத்திரையை கிழித்து இருக்குறது.

-இன்பா


Tuesday, August 28, 2012

'சிவாஜி 3D' - மீண்டும் ஒரு திரைவிமர்சனம்

லோகத்தில் எப்பொழுதெல்லாம் அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஷங்கரின் கடவுள் அவதாரமெடுக்கிறார். அதர்மத்தை அதர்மத்தால் முறியடித்துத் தர்மத்தை நிலைநாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார். 
அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம் போன்ற நாயகர்களின் வடிவில் முந்தைய யுகங்களில் மனிதனுக்குரிய குணாம்சங்களோடு அவதரித்த ஷங்கரின் கடவுள் இப்பொழுது நேரடியாகக் கீழே வந்து தன்னுடைய ரசிகர்களுக்கு 'விஸ்வரூபதரிசனம்' தந்திருக்கிறார். 

முந்தைய யுகங்களின் அதர்மக்காரியங்களுக்கும் 'சிவாஜி' யுகத்தின் அதர்மக்காரியங்களுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அதர்மத்தைத் தூண்டும் இந்த யுகத்தின் அசுரர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை நீட்டும் சாதாரண அரசு ஊழியர்களோ பெட்டிக் கடைக்காரர்களோ தெருச் சுற்றிகளோ அல்லர். கல்வி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து வரம்பே இல்லாமல் கொள்ளையடிக்கும் பகாசுரன். 

அவனுடைய சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்று கொண்டிருக்கிறது அரசாங்கம். காசிமேட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிசேஷன் என்னும் அந்த அசுரனை அழிக்க, சாஃப்ட்வேர் இன்ஜினியரின் ரூபத்தில் அமெரிக்காவிலிருந்து டாலர் மூட்டைகளுடன் வந்திறங்குகிறார் கடவுள்.

அவனைச் சும்மா போகிறபோக்கில் வதம் செய்துவிட முடியுமா? அதற்காகத்தான் ரஜினி தேவைப்படுகிறார். ஏ.வி.எம். என்னும் பெருமுதலாளியின் முதலீடு தேவைப்படுகிறது ஷங்கருக்கு. ரஜினி ஏற்கனவே தமிழக விளிம்பு நிலை மனிதர்களின் கடவுள். அவரை எல்லோருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான 'திருப்பணி'களை ஊடகங்களின் துணையோடு மேற்கொண்டது 

ஏ.வி.எம். நிறுவனம். சி.என்.என். ஐ.பி.என்., டைம்ஸ்நௌ, என்.டி.டி.வி. போன்ற ஆங்கிலச் செய்தி சானல்களின் உபயத்தால் ரஜினி இப்பொழுது இந்திய நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். 

ஷங்கரின் சமூகப் பொறுப்பு உலகறிந்தது. ஊழலுக்கெதிராகப் போராடுவதில் அவருக்கு நிகரான இயக்குநர்கள் யாருமில்லை. சதா சர்வகாலமும் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதன் தற்போதைய சீரழிந்த நிலைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் தேடுவதில் தனது வாழ்நாட்களையும் பணத்தையும் செலவிட்டுக்கொண்டிருப்பவர். வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் தீர்க்கவும் (தீர்த்துக்கட்டவும்) செய்திருக்கிறார். அதற்கு கே.டி. குஞ்சுமோன், 'சிந்தனைச் சிற்பி' சுஜாதா எனப் பலரும் துணை நின்றிருக்கிறார்கள்.

ஆனால், தீர்க்கத் தீர்க்கச் சீரழிவு பெருகிக்கொண்டே போகிறது. இந்த அரசு அதிகாரிகளும் குமாஸ்தாக்களும் மந்திரிகளும் அரசியல்வாதிகளும் 'லஞ்சம் வாங்காதே' என்று ஒரு தடவை சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். 'நூறு தடவை சொன்னா'லாவது கேட்பார்களா என்னும் அவரது பொறுப்புணர்வு மிக்க சிந்தனையின் விளைவே ரஜினி அவருடைய படத்தின் நாயகரானதற்கான காரணமாயிருக்க வேண்டும்.


மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தத் திரைப்படத்தை எப்பாடுபட்டாவது ஒன்றுக்குப் பத்துத் தடவை பார்க்க வேண்டியது மட்டும்தான். 'மற்றதை' அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ரஜினி தனியொரு மனிதனாகவேகூடப் பார்த்துக்கொள்வார். அவர் சிங்கம்; பன்றி அல்ல. இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் இந்தப் படத்தை அடுத்தடுத்துப் பார்த்து 'நல்ல படம்' எனச் சான்றிதழ் வழங்கிவிட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் 'கூட்டம்' அவர்களைப் பின்தொடர்கிறது. 

பிரம்மாண்டங்களின் மீதும் கிராபிக்ஸ் போன்ற நவீன உத்திகளின் மீதும் ஷங்கருக்கு இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன் நிலையை மேம்படுத்திக்கொண்டுள்ளார் ரஜினி. அவரது ஒப்பனைகளும் உடையலங்காரங்களும் சண்டையும் நடனமும் இளம் நடிகர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாபாவின் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஜினி, ஒரு நடிகராகத் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கு முக்கியத்துவமளித்திருக்கிறார். ஷங்கர், சுஜாதா கூட்டணியின் திரைக்கதை வழக்கமான ரஜினி பட பார்முலாக்களோடு சமரசம் செய்துகொண்டுள்ளது. ஷங்கர் படங்களின் அடையாளமாக விளங்கும் அதிகார அமைப்பின் மீதான விமர்சனங்கள் மென்மையாக்கப்பட்டு ரஜினியின் பழிதீர்க்கும் கதையாடல் உத்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை 'ரஜினி விளைவு' என்றுகூடச் சொல்லலாம். ஆனால் ஷங்கர்- சுஜாதா கூட்டணியின் நுண் அரசியல் படம் முழுவதும் கிருமிகளைப் போல் பரவியிருக்கிறது.

நகைச்சுவைப் பாத்திரமொன்றில் நடித்திருக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையா 'அங்கவை, சங்கவை' என்னும் கறுப்பு நிறம் கொண்ட தன் மகள்களைக்காட்டி 'எங்கிட்ட ரெண்டு பொண்ணுக இருக்கு, கட்டறதா இருந்தா கட்டிக்குங்க, பழகறதுன்னா பழகிக்கிங்க' என 'இளிக்கும்'பொழுது சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்கிறது. 

சிரிப்பைத் தூண்டியது சாலமன் பாப்பையா பேசிய வசனங்களா அந்தப் பெண்களின் தோற்றமா? படத்தில் ரஜினி பேசும் 'சொன்னா அதிருதில்ல?' என்னும் 'பஞ்ச் டயலாக்' ரஜினி ரசிகர்களால் வெவ்வேறு தருணங்களில் பலவித அர்த்தங்களில் பிர யோகிக்கப்படுகிறது. 

ரஜினி ரசிகர்கள் கறுப்பான இளம் பெண்களைக் குறிப்பிடுவதற்குப் பாரி மகளிரின் பெயரைக் கேலியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையின் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் காட்டி, 'அங்க ஒரு அங்கவை சங்கவை நிக்குது பாரு' என ஒரு இளைஞன் சொன்னதைக் கேட்டபொழுது அது ரஜினி விளைவாக அல்ல, சுஜாதா-ஷங்கர் விளைவாகவே தோன்றியது எனக்கு. 

கறுப்பாக இருப்பது தொடர்பான தாழ்வு மனப்பான்மையை ஆழப்படுத்தும் இக்காட்சிகளில் பேசப்படும் வசனங்களில் தென்படும் விரசத்தையும் விஷமத்தனத்தையும் தமிழ் ரசிகர் 'கூட்டம்' கைதட்டி ரசிக்கும் என்பதில் ஷங்கருக்கோ சுஜாதாவுக்கோ எள்ளளவும் சந்தேகம் தோன்றியிருக்க முடியாது. 

சமூகத்தின் நெருக்கடிகளையும் தனிமனிதனின் பலவீனங்களையும் மட்டம்தட்டும் சொல்லாடல்கள் தொடர்ந்து நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. வெள்ளைச்சட்டையில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் ரவுடி ஆதிசேஷனின் பூர்வாசிரமம் சென்னையின் விளிம்புநிலை மனிதர்கள் வாழும் காசிமேடு. காசிமேடு போலீஸ் ரெக்கார்டுகளில் இடம்பெற்றுள்ள ரவுடி அவன். பிராமணர்கள் அதிகமாக வசிக்கும் மயிலாப்பூரையோ திருவல்லிக்கேணியையோ மேற்கு மாம்பலத்தையோ அப்படியொரு கொடிய வில்லனின் பூர்வீகமாகக் கற்பனை செய்ய முடியாததும்கூட சுஜாதாவின், ஷங்கரின் நுண்அரசியலின் விளைவுகள்தாம்.

இப்படத்தின் முதிர்ச்சியற்ற திரைக்கதையையும் விஷமத்தனமான வசனங்களையும் சிறுபிள்ளைத்தனமான தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டாடும் ஊடக அரசியலைப் பற்றித் தனியே எழுத வேண்டும்.

கையில் ஒரு லேப்டாப்பையும் மனம் திருந்திய சில ரவுடிகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு சில நாள்களுக்குள் 46 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்துவிடும் சாமர்த்தியம் கொண்ட ஒரு கற்பனையான நாயகனை மையப்படுத்தித் தமிழ் வாழ்வின் பல கூறுகளை நுட்பமான முறையில் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தைப் பொருட்படுத்துவதற்கோ விவாதிப்பதற்கோ ஒன்றுமில்லைதான். 

(எல்லா பத்திரிகைகளும் சாதா 'சிவாஜி' வெளியிட்ட சமயத்தில் 'ஜால்ரா' அடிக்க, காலச்சுவடு இதழ் மட்டுமே படம் பற்றி நேர்மையொடு பிரசுகரித்த ஒரு விமர்சனத்தை, "3டி சிவாஜி" வரப்போகும் இந்த சமயத்தில் இங்கே மறுபதிப்பு செய்து உள்ளேன். கட்டுரையாசிரியர் : தேவிபாரதி.)

Sunday, August 12, 2012

டெசோ மாநாடு - ஒரு சிறப்புக் கவிதை

காலம்காலமாக தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கதில் உள்ள ஒரு பழமொழிதான் என் நினனவுக்கு வருகிறது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்"  - டெசோ குறித்து ஈழ எழுத்தாளர் சமயந்தன்.
 

ன்னித்தீவாய் தொடரும்
ாவேரி நதிநீர்ப்
ிரச்சினையின் வயது
வருடங்கள் நாற்பது.

நூலாறாய் ஒடும்
ாலாற்றுக்கும்
வந்ததடா சோதனை
ஆந்திர அணை

முல்லை பெரியாரில்
மூச்சுமுட்டி நிற்கிறது
நம் தமிழக உரிமை.

சிறுநீர் கழிப்பிடமாக
சிறுவாணி ஆற்றை
மாற்றும்
முயற்சியில் இருக்கிறது
கேரள அரசு.

தமிழின துரோகம்
.என்பதின்
அடையாள சின்னமாய்..
கச்சத் தீவு.

வாரம் தோறும்
ராமேஸ்வர மீனவர்கள் மீது
'பயிற்சி ஆட்டம்' ஆடுவது
இலங்கை ராணுவத்துக்கு
வாடிக்கை.

ொந்த நாட்டு
அகதிகளாய்..
நம் மீனவர்கள்.
  
ப்படி
ள்ளூரில் இருக்கும்
'ஆணிகளை' 
புடுங்க வக்கில்லாத
பண்ணாடைகள் எல்லாம்
ஒன்றுகூடுகிறார்களாம்

"டெசோ மாநாடு"
என்னும் பெயரில்
வெளியுரில் இருக்கும்
'மலையை' பெயர்க்க

கெடுகெட்ட
அரசியல் சவாரிக்கு
இரண்டு குதிரைகள்.
ஒன்று
இங்கிருக்கும்
தமிழர்கள்.
இன்னொன்று
ஈழத் தமிழர்கள்.

கூவம் ஆறும்
மணக்கிறது
இவர்களின்
சாக்கடை அரசியலின்
முடை நாற்றத்தில்.

ஒருவரி விமர்சனம்
டெசோ மாநாடு -
தூத்தேறி.

கவிதை : இன்பா

Thursday, August 2, 2012

காத்திருப்பு

ஒரு பிரிவின் வலி..

ஒவ்வொரு ஞாயிறு

உறங்கப்போகும் போதும்.


திங்கட்கிழமை காலைப்பொழுதுகளில்

தொடங்கிவிடுகிறது

ஞாயிற்றுக்கிழமைக்கான

காத்திருப்பு.


அவசரகதி இயந்திரஒட்டம்

அரைகுறை உணவு என

இரண்டு சக்கரங்கள்

ஞாயிறு தவிர

வாரத்தின்

மற்ற நாட்களுக்கு.


நிம்மதிப் பெருமூச்சு வரும்

அலுவலகம் முடியும்

ஓவ்வொரு

சனிக்கிழமை மாலையும்

தியான அநுபவம்.


நிதானவிழிப்பு

காபி அருந்தியபடி

வாசிப்பு

விரும்பிய உணவு

மதிய உறக்கம்

பிடித்தச் சேனல்

இப்படி

பணிச்சுமையை

இறக்கிவைக்கும்

நாளல்லவா ஞாயிறு?


"வீட்லேயே அடைஞ்சு இருக்கேன்.

நாளைக்கு..." என இழுக்கும்

என் மனைவிக்கு

தெரிந்திருக்க நியாயமில்லை

இந்த

ஒரு நாள்

வரம் வாங்க

நான் இருக்கும்

ஆறு நாள் தவத்தை.



கவிதை : இன்பா

Monday, July 23, 2012

கேப்டன் லெட்சுமி - அஞ்சலி

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்றான் பாரதி. தங்களால் போரினையும் நடத்தமுடியும் என நிரூபித்தவர் கேப்டன் லெட்சுமி.

அக்டோபர் 24, 1914 ஆம் வருடம், அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை S.சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர், தாய் அம்மு அவர்கள் கேரளாவை சேர்ந்த சமுகசேவகர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்.

ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, 1938 ஆம் வருடம் சென்னை மருத்துவகல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின் சிங்கப்பூர் சென்று, அங்கு வாழும் ஏழை இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவமையம் அமைத்தார். 1942 ஆம் வருடம் சிங்கப்பூர், ஜப்பான்வசம் வந்ததும், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சைகள் செய்தார்.

அப்போதுதான் அவர் வாழ்கையின் முக்கியமான திருப்பமான சம்பவம் நடந்தது. ஜூலை 2, 1943 ஆம் வருடம் சிங்கப்பூர் வந்த நேதாஜி அவர்கள் பெண்களுக்கான படைபிரிவை ஜான்சி ராணியின் பெயரால் தொடங்கவிருப்பதாக அறிவிக்க, கணமும் தாமதிக்காமல் அதில் இணைந்தார் லெட்சுமி. ராணுவ சேவைகளோடு, மருத்துவ சேவைகளையும் கவனித்தார். தனது சிறப்பான பணிகளால் விரைவில் ஜான்சிராணி படைபிரிவின் தலைமை பொறுப்பை ஏற்று கேப்டன் லெட்சுமி ஆனார்

1946, மார்ச் 4 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர், நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் நமது அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு போட்டியிட்டு, தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் பிரேம்குமரோடு கான்பூரில் செட்டில் ஆகி, ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அடுப்புஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் லெட்சுமி சாதித்துக்காட்டிஇருக்கிறார். இவரைபோன்று 'வெளிச்சத்திற்கு' வராமல் 'இருட்டில்' இருக்கும் பாரதி கண்ட புதுமைபெண்கள் எத்தனயோ?



இன்று (23-7-12 ) இயற்கை எய்திய கேப்டன் லெட்சுமி அவர்களுக்கு எங்களின் வீர வணக்கங்கள்.

ஜெய்ஹிந்த்.



-இன்பா

Sunday, July 8, 2012

'சாணக்யன்' தந்திரம்


மனிதன் தனியாகவே பிறந்தான். தனியாக இறக்கின்றான். நல்லதோ, கெட்ட கர்மவினையோ தனியாக அனுபவிக்கிறான். இறுதியில் சொர்க்கமோ, நரகமோ கடைசியில் தனியாகவே செல்கிறான்.

ஒரு மனிதனின் உயர்வு அவனது செய்கையால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. அவனது பிற்ப்பால் அல்ல.

ஒரு மனிதன் எப்பொதும் அதீத நேர்மையுடன் இருக்ககூடாது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.அதுபோலவே நேர்மையான மனிதனே முதலில் தண்டிக்கபடுகிறான்.

ஒரு வேலையை தொடங்கும் முன், மூன்று கேள்விகளை உன்னுள் கேள்.

   1..இதை நான் ஏன் செய்கிறேன்?
   2. இதன் விளைவு என்ன?
   3. தற்பொது இதில் நான் வெற்றிபெறுவேனா?

இந்த கேள்விகளுக்கு ஆழ்ந்த சிந்தனைக்குபின் உண்மையாகவும், திருப்திகரமாகவும் விடைகள் உன்னுள் கிடைத்தப்பின், காரியத்தை செய்யத் தொடங்கு.

முட்டாளுக்கு புத்தகம் அறிவைத் தரும் என்பது கண்ணாடி குருடனுக்கு பார்வையை தரும் என்பதை போலாகும்.

கல்வியே உண்மையான நண்பன். கற்றவன் எங்கும் மதிக்கபடுகிறான். கற்றவனின் அழகு இளமை அழகைவிட மேலாக காட்டுகிறது.

பாம்பு தற்போது விஷமற்றதாக இருக்கலாம். ஆனாலும், அது எப்பொதாவது விஷத்தை கக்கும் என்பதில் அவதானமாக இரு.

கடவுள் சிலைகளில் இல்லை. உன்னுள் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு கடவுளே. அதனை உள்ளிருந்து உருவாக்கும் ஆத்மனே கோயில்.

Thursday, June 7, 2012

நான் மொட்டைமாடி பேசுகிறேன்


நட்சத்திர  புள்ளிகளை இணைத்தபடி
நிலவொளிப் பாயில்
என்மீது படுத்ததுண்டா
நீங்கள்?

ஒரு
சூர்யோதையப் பொழுதில்
கோபுர தரிசனம்
செய்ததுண்டா நீங்கள்?
என்மீது நின்றபடி.

அந்திமாலை வானத்தில்
பறவைகள் ஊர்வலம்.
இப்படியொரு வேளையில்
என்றாவது ஒரு நாள்
என்னோடு சேர்ந்து
ஒரு கவிதைப்புத்தகம்
வாசித்ததுண்டா?

உங்களோடு
நீங்கள் மனம்விட்டு பேச...
யாருமில்லா வேளையில்
என்வழி பேசுவதே
ரே வழி.

எங்கிருந்தோ ஒலிக்கும்
பாடல்.

பூக்களாய்..
என்மீது மோதி
மொட்டுக்களாய் சிதறும்
மழைத்துளிகள்

தெரியுமா உங்களுக்கு?
இந்த பட்டியலில்
இருப்பதும்,
இல்லாமல் விடுபட்டதும் .

அன்று
அம்மாவோடு சேர்ந்து
நிலாச்சோறு ஊட்டிய
நான்..
இன்றோ
ஒரு
சரக்கு தர்'பார்'.

துணி, வற்றல்
உலர்த்தவும்
லாயக்கு இல்லாமல்
போய்விட்டேன் நான் .
பால்கனியின்
வரவுக்கு பின்.

அண்டை வீட்டுக்காரர்களை
மட்டுமல்ல
எல்லோருக்கும் மேலிருக்கும்
என்னையும் தெரியாத
இன்றைய
அடுக்குமாடி மனிதர்கள்.

இன்றைக்கு
காணாமல் போனவர்கள்
பட்டியலில்...
திண்ணை
தாவணி
துப்பட்டாவோடு
நானும்.


கவிதை :  இன்பா

 
Follow @kadaitheru