Monday, July 25, 2011

6-ஆம் அறிவு

அன்பு வாடிக்கையாளர்களே,தவிர்க்க இயலாத சில பணிகளால், கடைதெருவில் சரக்குகளை கடந்த சில வாரங்களாக வெளியிட இயலாமல் போய்விட்டது.

இதோ, மீண்டும் நமது சிறப்பு தொடரான "6-ஆம் அறிவு " தொடருடன் சரக்குகள் இனி தொடரும்.



அறிவு சரக்குகள் :

உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி தெரியுமா? அது உலகிலேயே அதிக மக்களை கொண்ட சீனா நாட்டின் சீன மொழிதான்.

உலகிலேயே அதிக மொழிகளை கொண்ட நாடு...வேற என்ன சார். நம் இந்திய நாடுதான். நம் நாட்டில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை....1652 . அதில் ஆட்சி மொழியாக இருப்பவை மொத்தம் 18 மொழிகளே.

Acoustics - இதுதான் ஒளியை பற்றிய அறிவியல் துறையின் பெயர்.

Hygrometor - காற்றின் ஈரப்பதத்தை அளவிட உதவும் கருவியின் பெயர் இது.

Lactometor - இது நாம் குடிக்கும் பாலின் அடர்த்தியை அளவிட இருக்கும் கருவி.

லேசரை கண்டுபிடித்தவர் பெயர்...கார்டன் கௌல்ட். வருடம் 1957 .

நீல் ஆம்ஸ்ட்ராங் , நிலவில் முதலில் காலடி வைத்தவர் என்பது எங்களுக்கு தெரியும்தானே? நிலவில் அவரை தொடர்ந்து இரண்டாவதாக காலடி எடுத்துவைத்தவர் பெயர்... எட்வின் ஆல்ட்ரின்.

பூமியின் வயது 4.6 பில்லியன் வருடங்கள். பரப்பளவு :415,120.000 சதுர கிலோமீட்டர்.

3900 தீவுகளை கொண்ட நாடு...ஜப்பான். உலகின் மிகபெரிய தீவு...கிரீன்லாந்து. உலகில் விவசாய நிலங்களை அதிகம் கொண்ட நாடு...இந்தியா இல்லை...ஜெர்மனி.

சராசரி மனிதனின் மூளையின் எடை : ஒன்றரை கிலோ. அளவு : ஒன்றரை லிட்டர்.

"ஜகானோஸ் கோப்" என்றால் என்ன தெரியுமா? அதுதான் நமது மூளையை தினசரி மழுங்கடித்து கொண்டிருக்கும் டிவி.

அறிவுக்கு விருந்து :

ஒரு ஜென் கதை :

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.

தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.

கதையின் நீதி :
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

அறிவுக்கு அழகு :



-இன்பா

 
Follow @kadaitheru