Monday, May 2, 2011

'ஜைடாபூர் அணுஉலை' - அநாதையாகும் மக்கள்



சுனாமி தாக்குதலை தொடர்ந்து,ஜப்பான் நாட்டில் உள்ள அணு உலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உலகின் மிக சிறந்த தொழில்நுட்பத்தை உடைய ஜப்பானால் கூட, அணு உலைகளில் இருந்து கசிந்து வரும் கதிர்வீச்சை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அங்கு ஜப்பானிய பெண்களின் தாய்ப்பாலில் கூட, கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதை கண்டு அறிவியல் அறிஞர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

இந்த தருணத்தில், சுவிசர்லாந்து,ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் புதிதாக தொடங்கவிருந்த அணு உலை திட்டங்களை உடனே நிறுத்திவிட்டன.

ஆனால்,எந்தவித கட்டமைப்பு மற்றும் ஜப்பானை போன்று நவீன பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாத, நமது இந்திய அரசு ஒரு புதிய அணுஉலை தொடங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது.

ஜைடாபூர் அணு உலை திட்டம் - மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்து உள்ள ஜைடாபுரில், சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளது இந்திய அரசு.

இப்பகுதி, கொய்னா என்னும் பகுதி, பூகம்பம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு, அதற்க்கான வாய்ப்புகள் இல்லாத இடமாக இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறது Atomic Energy Regulatory Board (AERB) .

அதற்க்கான அளவீடுகளாக, இந்த ஆராய்ச்சி நிறுவனம் சில அறிவியல் ஆதாரங்களை வழங்கி உள்ளது.

Latitude of JNPP site: 16° 34’ 38” N to 16° 36’ 29” N

Longitude of JNPP site: 73° 19’ 02” E to 73° 20’ 48” E

மேற்கண்ட இந்த அளவுகளால், பூகம்ப மற்றும் இயற்கை சீரழிவுகள் இல்லாத பகுதியாக இயற்கையாகவே அமைந்து இருக்கிறது இப்பகுதி என்கிறது இந்திய அரசு.

ஒரு யூனிட்டுக்கு 1650 மெகாவாட் என்ற கணக்கில், ஒரு நாளைக்கு 36 - 39 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த ஜைடாபூர் அணு உலை.இதை போன்று 1650 மெகாவாட் திறன் கொண்ட ஆறு ரியாக்டர்கள், 250 - 300 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட போகின்றன.

இந்த அணு உலை "PWR-type" என்னும் உரேனியம் மூலப்பொருளாக பயன்படுத்தபட போகிறது. இது, International Atomic Energy Agency (IAEA)/Atomic Energy Regulatory Board (AERB) ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது.

இந்த திட்டத்தின் பயன்களாக பின்வருவனவற்றை அறிவித்து இருக்கிறது அரசு, வழக்கமான விஷயங்கள்தான்.

இதன் மூலம், நாட்டின் மின்சார பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

பல்லாயிரம்பேருக்கு இதன் மூலம் நேரடியாகவோ,இல்லை மறைமுகமாகவோ வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த அணு உலையை சுற்றி உள்ள பகுதிகள் பெரும் தொழில் வளம் பெருகும்.

இந்த திட்டத்திற்கு, ஜப்பானை முன்னுதாரணமாக காட்டி, முன்னாள் அணு ஆராய்ச்சியாளர்கள், சமுக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பாதுக்கப்பற்ற அணு உலை என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

மிக முக்கியமாக ,மக்கள் பிரச்சினை ஒன்று முழு பூசணிக்காயாக மறைக்கப்படவிருக்கிறது.

இந்த திட்டத்தால்,ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் தங்களின் வசிப்பிடங்களை காலி செய்யும் கட்டாயம் ஏற்ப்பட்டு இருக்கிறது.

இதனால், அப்பகுதி மக்கள் முழுவதும் இந்த திட்டத்திற்கு, மத்திய அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்களை தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனால், மக்களின் கோரிக்கைகளை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முழுவீச்சில் இறங்கி விட்டது.

ஆனானப்பட்ட ஜப்பானே, அணுஉலை திட்டங்களால் பெரும் அழிவை சந்தித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு பெற்ற நாடுகள் எல்லாம் தங்களின் அணுஉலை திட்டங்களை கைவிட்டு விட்டன.

இந்த தருணத்தில்,ஜைடாபூர் அணு உலை திட்டம் தேவையா?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் அணுஉலைகளை திறந்தால் ஏற்ப்படும் ஆபத்துக்களை உணர்ந்து, குறைந்த முதலீட்டில் அவற்றை செயல்படுத்த தேர்வு செய்து இருக்கும் நாடுதான்...நமது இந்தியா. இந்த ஜைடாபூர் அணுஉலை திட்டத்திலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த AREVA என்ற நிறுவனம் முதலீடு செய்து உள்ளது.

ஏன், பிரான்ஸ் நாட்டில் இந்த அணு உலை திறக்க இடமில்லையா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மகராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு எதிராக, Fax, E-Mail மூலம் லட்சக்கணக்கான சமுக ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, அப்பகுதி மக்களோடு விவாதிக்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துவிட்ட மத்திய அரசுக்கு
நமது எதிர்ப்பை நாமும் தெரிவிப்போம்.

"Mr. Prime Minister, respect public opinion and stop the Jaitapur nuclear reactor project. "




-இன்பா

4 comments:

Philosophy Prabhakaran said...

தாய்ப்பாலிலும் கதிர்வீச்சு என்பதை கேட்பதற்கே கவலையாக இருக்கிறது...

கூடல் பாலா said...

இப்போது இருக்கும் மத்திய அரசை மக்கள் தேர்ந்தேடுத்தார்களா அல்லது சர்வ தேச அணு மின் நிலைய கம்பெனிகள் தேர்ந்தேடுத்தனவா ?

கூடல் பாலா said...

இப்போது இருக்கும் மத்திய அரசை மக்கள் தேர்ந்தேடுத்தார்களா அல்லது சர்வ தேச அணு மின் நிலைய கம்பெனிகள் தேர்ந்தேடுத்தனவா ?

Anonymous said...

WE ARE ASHAMED OF OUR POLITICAL LEADERS

 
Follow @kadaitheru