Monday, May 23, 2011

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் - "மர்மத்தின்" பின்னணி


திருச்சி மேற்கு தொகுதி - இன்று தலைப்பு செய்திகளில் அடிபட்டு கொண்டு இருக்கும் பகுதி. இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுலாதுறை அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட மரியம் பிச்சை இன்று காலை சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

கார் ஒரு லாரியின் மீது மோதிவிட, அப்போது முன் இருக்கையில் இருந்த அமைச்சர் மரியம் பிச்சை சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியாகிவிட்டார். ஆனால், டிரைவர் மற்றும் காரில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பி இருக்கின்றனர்.

"இந்த சாவில் மர்மம் உள்ளது. இவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த விபத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் " என்று அறிவித்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

அவர் குறிப்பிட்டுள்ள...அந்த "மர்மத்தின்" பெயர்...கே.என்.நேரு.

தொடர்ந்து இந்த தொகுதியை கையில் வைத்து இருந்த நேருவின் குற்ற பின்னணி.

திமுக அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேருவின் அசைக்க முடியாத கோட்டைதான் மரியம் பிச்சை தேர்ந்து எடுக்கப்பட்ட திருச்சி மேற்கு.

அவரும், அவரது மருமகனும் நடிகருமான நெப்போலியனும் திருச்சியில் பெரும் கோடிஸ்வரர்கள்.

அரசியலில் நுழைந்த ஆரம்பம் தொட்டே, கட்டப்பஞ்சாயத்து,ரவுடியிசம் என வாழ்ந்தவர்தான் நேரு. இவரை எதிர்த்த ஒரு சிலரை 'அட்ரஸ்' இல்லாமல் செய்து இருக்கிறார் நேரு.

திருச்சியில் இவர் வளைக்காத இடங்களே இல்லை. இவரது பினாமி பெயரில் ஏராளமான நிலங்கள்,வர்த்தக நிறுவனங்கள், அப்பார்ட்ட்மேன்ட்டுகள் உள்ளன.

உதாரணதிற்கு அவர் அமைச்சர் ஆன பின்பும் கட்டப்பஞ்சாயத்துக்களை அவர் கைவிடவில்லை என்று கூறும் ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது.

திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் வசிக்கும் ஒரு 'பெரிய' குடும்பத்தில் ஒரு குடும்ப தகராறு நடந்தது. அதில் தலையிட்ட கே.என்.நேரு , தவறு என்றும் தேர்ந்தும் தவறு செய்தவருக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னார். தனது அடியாட்களுடன் சென்று எதிர்த்தரப்பை மிரட்டினார்.

எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் சமயோகிதமாக அந்த தருணத்தில் மதுரையில் இருந்த அழகிரியை நேரடியாக தொடர்புகொண்டு விவரத்தை கூற, அவரின் தலையிட்டால் , மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான நேரு அந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கவேண்டி வந்தது.

சமிபத்தில் நடந்த தேர்தலுக்கு, சில நாட்கள் முன்பாக திருச்சி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு மினி பஸ் ஒன்றின் மேல், ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஐந்து கோடி ருபாய் பணம், ஐந்து மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்தது தேர்தல் ஆணையத்தையே உலுக்கியது.

அந்த பேருந்தின் உரிமையாளர் கே.என்.நேருவின் உறவினர்.

"அந்த ஐந்து கோடி ருபாய் என்னுடையதுதான். ஆனால் கணக்கு இல்லை" என்று தெரிவித்து இருக்கிறார் அந்த ஆசாமி.

ஐந்து கோடி ருபாய் பணத்தை சாக்கு மூட்டையில் கட்டி, அதை தேவை இல்லை என்று தூக்கி போடும் நேரு வகையாறாக்கள் வேறு எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதே முதல்வர் சொன்ன "மர்மத்தின்" பின்னணி.

அமைச்சர் மரியம்பிச்சை அவர்களின் மரணத்தின் "மர்மம்" இன்னமும் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம், அவர் கார் மீது மோதிய லாரி டிரைவரையும் காணவில்லை. அந்த லாரியையும் காணவில்லை.

எஸ்கார்ட் போலிஸ் இருந்தும், மாவட்ட காவல்துறை உஷார்படுத்தப்பட்டும் எப்படி இதுவரை அந்த லாரி ஓட்டுனர் சிக்கவில்லை??

பொதுவாக வேண்டுமென்றே செய்தாலும், சாலை விபத்துக்களில் சரியான ஆதாரங்களை திரட்டமுடியாது. ஆகவே, இந்த மரணத்திற்கு காரணமான அந்த லாரி ஓட்டுனரை கைது செய்து, அவரின் பின்னணி மற்றும் அந்த லாரியின் ஆவணங்களை தீவிரமாக அலசினால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.

இந்த தொகுதியில் இடைதேர்தல் நடந்தால், கே.என்.நேரு மட்டுமே திமுகவின் வேட்ப்பாளராக இருப்பார் என்பது நூறு சதம் உண்மை.

இந்த சாவின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இருக்கலாம் என்று திருச்சி மக்களிடையே சந்தேகம் உலவி வருகிறது. மரியம் பிச்சை மரணத்தை தொடர்ந்து திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிரித்தமுகத்தோடு திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பதவி ஏற்க சென்ற மரியம் பிச்சை, சில மணிகளில் திருச்சி அருகே பிணமான துயரம் அதிர்ச்சிகரமானது.

ஆகவேதான், ஜெயலலிதா அவர்கள் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார்.

இது நிஜமாகவே சாலை விபத்தா? இல்லை திட்டமிடப்பட்ட கொலையா?

அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தின் பின்னணியில் இருக்கும்,முதல்வர் சொன்ன "மர்மம்" எப்போது விடுபடும்???

-இன்பா

1 comments:

Anonymous said...

தேவிடியா பொட்ட பய.

 
Follow @kadaitheru