Thursday, March 17, 2011

வைகோ - வைGO ??


அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து, ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துள்ளார். நாளை முதல் அவர் பிரசாரத்தை துவக்குவதாக இருந்தார்.

இந்நிலையில், கூட்டணி கட்சித்தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி 3வது அணியை அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

"மூன்றாவது அமைக்கும் வாய்ப்பே இல்லை. கருத்துவேற்றுமைகளை களைந்து எங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விஜயகாந்துடன் பேசினோம்" என்றார் மூவந்தர் முன்னேற்ற முன்னணி சேதுராமன்.

அதிமுக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கூட்டணி தொடரும் என அறிவித்து இருக்கிறார்கள்.

"கடந்த சட்டசபை தேர்தல் முதல், ஐந்தாண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் விசுவாசமாக தொடர்கிறார். ஐந்தாண்டுகளில் எந்த போராட்டம் என்றாலும், இவர் சொந்தமாக தன் கட்சிக்கென்று நடத்தவில்லை.

சாதாரண அறிக்கை வெளியிடுவது என்றாலும், ஒவ்வொரு பிரச்னையிலும், ஜெயலலிதாவின் முடிவு என்ன என்று அறிந்த பின்பே அரசியல் செய்தார்.கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, "ஜெ., எவ்வழியோ அவ்வழி' என்று செயல்பட்டவர் வைகோ. தன் கட்சியின் பொதுச்செயலராக செயல்பட்டாரோ இல்லையோ, ஜெ.,வின் தளபதியாக இருந்தார். அவரது விசுவாசத்திற்கு இப்போது கிடைத்த பரிசு இதுவா" என்கிறார்கள் வைகோவின் தொண்டர்கள்.

ஆனால், பாமக போன்ற எதிர்கட்சிகளின் வயிற்றில் மீண்டும் புளியை கரைக்கும்விதமாக, தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கேட்கும் தொகுதிகளை தருவதற்கு, அ.தி.மு.க., இறங்கி வந்தது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பேச்சு வார்த்தை துவங்கியது.
ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும், அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும், சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், அ.தி.மு.க., இறங்கி வந்தது. தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., நேற்று இறங்கி வந்து, பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக சூழ்நிலையை உருவாக்கியதை அடுத்து, மூன்றாவது அணி முயற்சி நேற்றிரவு முடிவுக்கு வந்தது என்கிறது செய்தி.

வைகோ, வைGO ஆவாரா? இல்லையா? என்று இன்று தெரிந்துவிடும்.

0 comments:

 
Follow @kadaitheru