Saturday, April 30, 2011

அம்மா என்னும் தொழிலாளி


அம்மா - அம்மா என்னும் வர்க்கம் போன்று ஒரு உழைக்கும் வர்க்கம் உண்டா? குடும்ப பிரச்சினைகளோடு போராடும் ஒரு பாட்டாளி வர்க்கம் உண்டா?

வாழ்நாள்தோறும் தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு உன்னத தொழிலாளி நமது வீட்டு "அம்மா".

அவள், கடமையை கண்ணென கருதும் உலக தொழிலாளார்களுக்கு எல்லாம் முன்னோடி.

இந்த தருணத்தில், நான் உங்கள் முன் நிறுத்த விரும்பும் ஒரு செய்தி...மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ரஷிய தொழில் புரட்சியை,பொதுவுடைமை சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட உலகின் தலைசிறந்த நாவல்..."தாய்".

அதில், குடும்பத்திற்காக அடுப்படியில் வேகும் ஒரு புரட்சிக்காரனின் தாய், அவன் தன் நண்பர்களோடு நடத்தும் விவாதங்களை கேட்டு, அதில் பங்கு கொண்டு, பின்னர் பொதுவுடைமை புரட்சிக்கே தலைமை ஏற்கும் போராட்ட வீராங்கனையாக உருவாகிறாள்.

மே தினத்தின் ஒரு புதிய சிந்தனையாக நாம் இதனை நம் கவனத்தில் வைப்போம்.

அம்மா என்னும் கடவுளின் தொழிலாளிக்கு வந்தனம்.

கடைத்தெரு வாடிக்கையாள அன்பர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள்

இங்கே...கிராமத்தில் தனக்காக ஓடாய் உழைத்த தனது ஏழைத்தாயின் நினைவுகளை பகிர்கிறார் கவிஞர் வைரமுத்து.



-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru