Friday, July 30, 2010

'டாப் கியரில்' அஜித்


"வாழ்க்கை என்பது ஒரு பயணம் " - இது நடிகர் அஜித் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவருக்கு மிக பொருத்தமாகவே இருக்கிறது.

அஜித் திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தனது பொன்விழா படமான, தனது 50 வது படமான "மங்காத்தா" பட வேலைகளில் வெங்கட்பிரபுவுடன் இணைந்து இறங்கிவிட்டார். இதில் இன்னொரு கதாநாயகனாக நாகார்ஜுனா நடிக்க போகிறார்.

ஆனாலும். அவரது ரசிகர்களிடம் நிலவும் குழப்பம் அஜித் எதற்கு முக்கியத்துவம் தருகிறார் என்பதுதான். சினிமாவுக்கா அல்லது அவரது தனிப்பட்ட தாகமான கார் ரேசுக்கா?

அவருக்கு மிகவும் நெருக்கமான நம்பத்தகுந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

"இப்போது அவர் தெளிவாக இருக்கிறார். கார் ரேசில் இருந்து விலகி தொடர்ந்து படங்கள் தரப்போகிறார். மேலும், பல புதிய திறமையான இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவிருக்கிறார் ".

தனது 50 வது படம் பற்றி பேசுகிறார் அஜித்.

"நான் இப்போது என்னுடைய 50 வது படம் செய்கிறேன். இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால், சினிமாவில் எனது பயணம் மிகவும் கடினமானது. நிலையில்லாத திரையுலகில் இவ்வளவு காலம் நிலைத்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு கயிற்றின் மீது நடப்பது போல " என்கிறார் அஜித்.

தனது வெற்றி மற்றும் தோல்விகளை சமமாக பார்க்கும் அஜித், தன்னம்பிக்கைக்கு பெயர் போனவர்.

சினிமா உலகிற்க்குள்ளும் அஜித்திற்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். உதாரணம் சிம்பு. ஒரு கேள்விக்கு சிம்பு அளித்த பதில்.

கேள்வி : த்ரீ இடியட்ஸ் ரீமேக்கில் நடிகர் விஜய்யுடன் நடிக்கிர்களா?

சிம்பு தந்த பதில் : விஜய் சார் பெரிய நடிகர்தான். அவர் கூட நடிக்கிறது நல்ல விஷயம் தான். ஆனால், எனக்கு அஜித் சார் பேன்ஸ் அதிகம் இருக்கிறார்கள். அதையும் யோசிச்சு தான் முடிவு பண்ணனும். அஜித் ரசிகர்களை நான் சங்கட படுத்த விரும்பவில்லை"


வெங்கட்பிரபு இயக்கத்தில், இன்னொரு முன்னணி நடிகரான நாகர்ஜுனாவுடன் எந்தவித இகோ இல்லாமல் நடிக்கும் அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், பில்லா படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்கிறார்.

சர்வம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாத விஷ்ணுவர்தன்,
பில்லா 2க்கான கதைக்களத்தை எழுதியிருக்கிறார். அஜித்தை மையமாக வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, கிரிடம் படத்தை இயக்கியவரும் , தற்போது வெற்றி நடை போடும் மதராச பட்டினம் படத்தின் இயக்குனர் விஜய்யுடன் ஒரு படம் செய்யபோகிறார். கௌதம் வாசுதேவ மேனனுடன் ஒரு படம் பண்ணவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

"நான் இங்கே நிலைப்பதற்காக இருக்கிறேன். என் எல்லைகளை தாண்டி சில தொலைவுகள் கூடுதலாக ஓடவும் நான் தயார்" என்கிறார் அஜித்.

சினிமா என்னும் காரை டாப் கியரில் ஓட்ட தொடங்கி இருக்கிறார் 'தல'.இனி அவரது பயணம் வெற்றிகரமாக இருக்கும் என எதிர்பார்ப்போம்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru