Tuesday, July 6, 2010

மங்காத்தா - 'தல' நிமர வைத்த அஜித்


தெருவோர கிரிக்கெட்டை கடந்து வராத இளைஜனே நம் தமிழகத்தில், ஏன் இந்தியாவிலையே இருக்க முடியாது. அதையே தனது முதல் படமான
'சென்னை - 28 ' இல் கருவாக்கி, நம்மை கவர்ந்தவர் வெங்கட் பிரபு.

அடுத்தது, ஒரு புதுசான ட்ரீட் மென்ட்டில் ஒரு திரில்லரை 'சரோஜா' என்று தந்தார். ஒரே பாணியில் வெளிவந்த 'கோவா' கொஞ்சம் சறுக்கினாலும்,வெங்கட் பிரபு நம் தமிழ் சினிமாவின் சிறந்த வளரும் இயக்குனர்களில், முதல் பத்தில் கண்டிப்பாக இடம் பிடிக்ககூடியவர்.

மங்காத்தா - இது வெங்கட் பிரபு இயக்க போகும் நான்காவது படம். அவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே, அவருக்கு உற்சாகம் தரும் நண்பராக விளங்கிய ஒரு முன்னணி நடிகர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுவும் அவருக்கு இது 50 வது படம்.

மேலும். இந்த படத்தில் ஜீவா உட்பட நான்கு ஹீரோக்கள்.

தனது 50 வது படத்தில், நான்கு ஹீரோக்களுடன்..அதுவும் கிட்டத்தட்ட நெகடிவ் வேடத்தில் நடிக்கும் துணிச்சல் வேறு யாருக்கும் வரும்?? 'தல' அஜித்தை தவிர.

வேட்டைக்காரன், சிங்கம் படங்களை தொடர்ந்து அனுஷ்கா அஜித்துடன் இதில் நடிக்க விருக்கிறார்.இந்த படத்தை தயாரிக்க போவது துரை தயாநிதியின் கிளவுட் நைன் மூவீஸ்.

மும்பையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை ஏற்கனவே 'நாயகன்' படத்தில் பேசப்பட்டு இருந்தாலும், அங்கு வாழும் தமிழ் தாதாக்களின் வாழ்க்கையை,தமிழர்களின் இருண்ட நிழல் உலகத்தை முதல் முறையாக வெங்கட் பிரபு "மங்காத்தா" மூலம் சொல்லப்போகிறார். மும்பையில் உள்ள தாராவியில் தங்கி, நெறைய ஹோம்வொர்க் செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

"வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நான்கைந்து ஹீரோக்களுடன் இணைந்து அஜித் நடிக்க உள்ளார். ஒரு இயக்குனராக எனக்கு இது மிகவும் பிடித்த விஷயம்" என்கிறார் அஜித்தின் 50 வது படத்தை இயக்குவதாக இருந்த கவுதம் மேனன்.

ஈகோ இல்லாமல் பல முன்னணி நடிகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் நடிப்பதை பல இந்தி படங்களில் கண்டு இருக்கறேன்.தமிழிலும் அது போன்ற ஆரோக்கியமான ஒரு முயற்சிக்கு "மங்காத்தா" மூலம் அடித்தளம் போட்டு இருக்கும் அஜித்துக்கு ஒரு Hats off.


-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru