Monday, July 12, 2010

கேள்விகளால் ஒரு வேள்வி


பிரபலங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்.....கேள்விகளால் ஒரு வேள்வியாக அவ்வப்போது தருகிறேன்.

1.முதல்வர் கருணாநிதியிடம் :

உங்கள் மகன்,பேரன்,பேத்திகளுக்கு பதவிகள் வாங்கித்தர நேரடியாக டெல்லி செல்லும் நீங்கள், தமிழக மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்கு மட்டும் டெல்லிக்கு கடிதம் எழுதுவதும், முரசொலியில் மடக்கி மடக்கி கவிதை எழுதுவதும் ஏன்??

(மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு அந்த கடிதம் கூட இல்லையே?)

2. செல்வி ஜெயலலிதாவிடம்:

சென்னையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தை கொட நாட்டுக்கு மாற்றும் திட்டம் உண்டா?

3.டாக்டர் ராமதாசிடம்:

"வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை" என்று முழங்கும் நீங்கள், வன்னியர் அல்லாத கருணாநிதி அல்லது ஜெயாவை முதல்வராக்க கூட்டணிக்கு கெஞ்சுவது ஏன்?

4.தொல்.திருமாவிடம்

"தென்னகத்து பிரபாகரன்" என்று உங்கள் அடிவருடிகளால் அழைக்கபடும் நீங்கள், எம். பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒரு வருடத்தில் தமிழகத்திற்கு சாதித்தது அல்லது தமிழர்களுக்கு செய்தது என்ன??

5. பங்காரு அடிகளாரிடம் :

சக்தியின் ஆண் வடிவமாக அப்பாவி கிராமத்து மக்கள் தங்களை கருதும் நிலையில், அவர்களை ஏமாற்றி மேல்மருவத்தூரையே வளைத்து போட்டுயிருப்பதும், லஞ்சம் கொடுத்து எந்த வித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மருத்துவக்கலூரி நடத்துவதும் பாவம் இல்லையா?

6. தமிழ்நாடு பத்திரிக்கைகள் மற்றும் மீடியாக்களிடம் :

நித்தியானந்தர் - ரஞ்சிதா விவகாரத்தை வைத்து கிழிகிழி என்று கிழித்து சம்பாதித்த நீங்கள் எல்லோரும், பங்காரு அடிகளார் ஊழல் விவகாரத்தில் மட்டும் ஒன்றுமே நடக்காதது போல மௌனம் சாதிப்பது ஏன்?

(இந்த லட்சணத்தில் அங்கு சென்ற நிருபர்கள் மீது தாக்குதல் வேறு நடந்து இருக்கிறது)

7.தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் :

எதற்கெடுத்தாலும் அடித்தட்டு மக்கள், ஏழை மக்கள் என்று பேசும் நீங்கள், தாங்கள் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியில் கட்டணமே இல்லாமல் எத்தனை ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்??

8.'நாம் தமிழர்' இயக்குனர் சீமானிடம் :

நீங்கள் இயக்கிய "தம்பி" படத்தில் சிங்கள நடிகையான பூஜாவை நடிக்க வைத்தபோது, எங்கே போயிருந்தது உங்களின் தமிழ் இன மொழி உணர்வு??

9.சன் டிவியிடம் :

சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்கள் சுறா போன்று படுமொக்கையாக இருந்தாலும், படம் ரிலிஸ் ஆன முதல் நாளே "உலகமெங்கும் வெற்றிநடை போடும்" என்றும், சன் டிவி டாப் டென்னில் "இந்த வாரம் முதல் இடத்தை பிடித்த படம் " என்றும் விளம்பரம் செய்யும் போது, மக்களை இப்படி ஏமாற்றுகிறோமே என்று உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா??

10. திருவாளர் பொதுஜனம் மற்றும் என்னிடமே நான் கேட்க விரும்பும் கேள்வி:

காசு வாங்கிகொண்டு ஒட்டு போடும் நமக்கெல்லாம் அரசியல்வாதிகளை பற்றியும், சமுதாயத்தை பற்றியும் கேள்வி கேட்க என்னய்யா தகுதி இருக்கிறது??

(கேள்விகள் தொடரும்)

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru