Tuesday, June 14, 2011

"ஒரு சில பார்ப்பனர்களின்" பட்டியல்


"ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம் " என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.

அவர் குறிப்பிட்ட ஒரு சில பார்ப்பனர்கள் யாராக இருக்கலாம் என்று யோசித்ததில், பின் வரும் லிஸ்ட் உருவாகிவிட்டது.

ஜெயலலிதா :

சொல்லவே வேண்டியது இல்லை. அதிமுக தலைவியான ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக (?) கொண்ட ஜெயலலிதா என்ற பார்ப்பனரிடம், படுதோல்வி அடைந்து, எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாமல் போய்விட்டார் கருணாநிதி. கடந்தமுறை அம்மா ஆட்சியின் போது. ராவோடு ராவாக கருணாநிதியை கு(து)ண்டு கட்டாக வேனில் ஏற்றி, "கொல்றாங்கப்பா" என்று கதற கதற...ச்சே, கருணாநிதியை கைது செய்துவிட்டனர்.

இந்த முறை என்ன நடக்குமோ என்று கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமே ஆடிபோய் இருக்கிறது.

திமுகவின் அரசியல் எதிரியான ஜெயலலிதா, கருணாவின் எவர்க்ரீன் பாப்பார எதிரிகளில், பாலக்காட்டு பார்ப்பனர் அமரர்.எம்.ஜி.ஆரை தொடர்ந்து "முதல்" இடத்தில் இருந்துவருகிறார்.

சு.சாமி :

சினிமாவில்தான் காமெடியன்கள் 'ஹீரோ' ஆவார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்குகள் மூலம் அரசியல் ஜோக்கர் என்று கூறப்பட்ட சுப்பிரமணியம் சாமி, இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஆசாமியாகி விட்டார் சு.சாமி. "யார் ஊழல் செய்தாலும் வழக்கு தொடர்வேன்" என்கிறார் சாமி.

2G வழக்கில் கருணாநிதியையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று ஆரம்பம் முதலே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கருணாநிதிக்கு 'குடைச்சல்' கொடுத்துவரும் சு.சாமிதான், கருணாநிதி குறிப்பிட்ட லிஸ்ட்டில் நம்பர் டூ.

சோ :

சு.சாமிக்கு அடுத்தபடியாக, கருணாநிதி குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் இன்னொரு பாப்பார சாமி....சோ.எஸ்.ராமசாமி. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர். "அதிமுக வெற்றி பெற விஜயகாந்த்தை சேர்க்க வேண்டும்" என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் போதே கணித்தவர் சோ.

இந்த தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வலுவாக அமைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தவர் சோ. "பலகோடிகள் ஊழல் செய்திருக்கும் கருணாநிதி தோல்வி அடையவேண்டும்" என்று கடந்த ஒரு வருடமாக பேசிவருகிறார் சோ.

SO,சோதான் கருணாநிதிக்கு எதிரான பாப்பார பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

ஞாநி :

"ஓ" பக்கங்கள் புகழ் எழுத்தாளர் ஞாநி, தன்னை ஒரு பெரியார்வாதியாக காட்டிக்கொண்டாலும், பிராமண சமுகத்தில் பிறந்த ஞாநி, தொடர்ந்து விகடன்,குமுதம்,கல்கி என்று துரத்த துரத்த "ஓ" பக்கங்கள் மூலம் கருணாநிதிக்கு எதிராக எழுதியும், பேசியும் கிட்டத்தட்ட ஒரு புரட்சி பத்திரிகையாளராகவே மாறி விட்ட இவருக்கு, லிஸ்ட்டில் நான்காம் இடம்.

லதா ரஜினிகாந்த் :

சூப்பர் ஸ்டாரின் மனைவி எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்றுதானே யோசிக்கிறீர்கள்?

தேர்தல் நாள் அன்று ரஜினிகாந்த், பூத்தில் அதிமுகவுக்கு ஒட்டு போட்டதை ஒரு பத்திரிக்கையின் நிருபர் போட்டோ எடுத்துவிட்டார். அவர் அப்படி ஒட்டு போட்ட நேரத்திற்கு பின், விழுந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கே போய் இருக்கலாம்.

ரஜினியை அதிமுகவுக்கு ஓட்டுபோட சொன்னவர் பார்ப்பனரான அவர் மனைவி லதா அவர்களாக இருக்கலாம் என்ற ஒரு "சந்தேகத்தின்(??)" அடிப்படையில் இவர் பெயர் நம் பட்டியலில்.

எஸ்.வி.சேகர்:

அதிமுக,திமுக,காங்கிரஸ் என்று அடிக்கடி கட்சி மாறி, எந்த கட்சியில் இருக்கிறோம் என்று இன்று அவர் நிலைமை அவர்க்கே காமெடியாக போய்விட்டது.

ஆனால், திமுகவில் கொஞ்ச காலமும், தேர்தலின் போது காங்கிரஸில் கொஞ்ச காலமும் இருந்து, தனது 'தாய்' கட்சியான அதிமுகவுக்கு "வேலை(!)" பார்த்துவிட்டார் மைலாபூர் பார்ப்பனர் எஸ்.வி.சேகர் என்கிறது நமக்கு கிடைத்த ரகசிய தகவல்.

கவிஞர் வாலி :

ஒரு வாளி(லி) கூஜா தூக்குகிறது என்று கவிதையே எழுதலாம்.
கருணாநிதியை புகழ்ந்து, ஸ்ரீரங்கம் பார்ப்பனர் கவிஞர் வாலி எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் சாம்பிளுக்கு.

சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது


உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது

நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!

எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;

உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!

கவியரங்கம்,பட்டிமன்றம், பாராட்டு விழாக்கள் என கவிஞர் அடித்த "ஜால்ரா" சத்தத்தில், கருணாநிதியின் காதுகளில் விழாமல் போய்விட்டது...மின்வெட்டு,விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள்.

இப்படியாக,கருணாநிதிக்கு கூட இருந்து "குழி" பறித்துவிட்டார் பார்ப்பன கவிஞர் வாலி.

திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் :

மேலே,நாம் குறிப்பிட்ட அனைத்து பார்ப்பனர்களையும் விட, கருணாநிதியை "நம்ப வைத்து மோசம் செய்தவர்" திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தான்.

தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னால், தனது குடும்பத்தை கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கும், குறிப்பாக தான் வெற்றி பெற, திருநள்ளாறு கோவிலுக்கும் தனது குடும்பத்தை அனுப்பி,அங்கு உள்ள பார்ப்பனர்களின் ஆசி பெற முடிவெடுத்தார் கருணாநிதி.

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

ஆறாவது முறையாக முதல்வராக , இந்த கோவில் பார்ப்பனர் பூஜையால் பதவி ஏற்ப்போம் என முடிவே செய்துவிட்ட கருணாநிதிக்கு, கடைசியில் கிடைத்தது வெறும் "எள்" மட்டுமே.

நீங்களே சொல்லுங்கள், இந்த திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தானே, கருணாநிதியை,திமுகவை தோற்கடிக்க வைத்தவர்?

பகுத்தறிவு(!) : இன்பா

என்னவோய் சொல்லுங்கோ, இந்த பட்டியல் போறுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

12 comments:

தடம் மாறிய யாத்ரீகன் said...

அடிச்சி தூள் பண்ணிடீங்க சார்

Raj, Singapore said...

ஒரு வாளி(லி) கூஜா தூக்குகிறது

simply superb sir

Anonymous said...

You missed Kedi brothers & family

Anonymous said...

Hilarious! Super!! - aNu

Jayadev Das said...

சூப்பர் மாப்பு!!

unmai solbavan said...

Please first add this subramaniyam swami's name in Prime Minister Rajiv Gandhi's assasination.

நண்பன் said...

ammavukku aayusu muluvathuma makkal sevai paniyayi koduththuvittargal? pinnala nadakka povathai evanaiyaa munnadi sariya solli irukkar?

R.Gopi said...

ஆஹா....

அட அற்புதம்.... என்று சொல்ல வைத்து விட்டீர்கள் இன்பா.....

அதுவும் கடைசியில் கருணாநிதிக்கு கிடைத்தது வெறும் “எள்” தான் என்று சொல்லி அதே எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுத்தது சூப்பர் என்று சொல்ல வைத்தது....

கலக்குங்க....

cyberthiru said...

super appu

cyberthiru said...

super appu

cyberthiru said...

super appuu

R.Gopi said...

கவிஞர் வாலி, கருணாநிதிக்கு தூக்கிய வாளியில் இருந்து ஒரு துளி இதோ :

தலைவா நீ
ரஜினியை விட பாப்புலர் ஃபிகர்
உன்னை கண்டதும்
ஏறுது என் ப்ளட் ஷுகர்

 
Follow @kadaitheru