Saturday, June 25, 2011

6 - ஆம் அறிவு

கடைத்தெருவின் சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இன்றைய மூன்றாம் பகுதியில்,உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான Emma Maersk பற்றிய சில குறிப்புகளை காண்போம்.



அறிவுச் சரக்கு : Emma Maersk - படத்தில் இருக்கும் கப்பலின் பெயர். இன்று உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுதான்.

இந்த கப்பல் பற்றிய சில குறிப்புகள்.

Emma Maersk கப்பல் உருவான நாடு, டென்மார்க்.

5000 பேர் பயணம் செய்யக்கூடிய அமரிக்க விமானம்தாங்கி கப்பலை விட,இந்த கப்பல்
பெரியது.

15000 கொள்கலன்கள்(containers), 13 பணிக்குழுக்கள் (crew) ஆகியவை இதன் கொள்ளளவு.

இதன் கொள்ளளவு காரணமாக, பனாமா மற்றும் சுயஸ் கால்வாய் வழியாக பயணம் செல்லமுடியாது. உயர்மட்ட கடல் வழி மட்டுமே இக்கப்பலால் செல்லமுடியும்.

கப்பலின் கட்டுபாட்டு அறைக்கு மொத்தம் 10 தளங்கள்(floors) உள்ளன.

ஒரே சமயத்தில் இந்த கப்பலில் 11 பளுதூக்கி கருவிகளால்(Cranes), சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ முடியும்.

இந்த கப்பலின் நீளம் : 1302 அடிகள்...அதாவது 396.85 மீட்டர்கள்.அகலம் : 207 அடிகள்...அதாவது 63.1 மீட்டர்கள்.

இந்த கப்பலின் சரக்குகள் கொள்ளளவு 123,200 டன்கள்.

இந்த கப்பலை இயக்கம் இயந்திரம் 108 920 குதிரை சக்தி கொண்டது. இந்த இயந்திரத்தின் அளவு : 26.7 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் உயரம்.
இதன் எரிபொருள் கொள்ளளவு : மணிக்கு 6,275 லிட்டர்கள்.

இந்த கப்பலின் அடிப்பரப்பில் சிலிகான் பெயிண்ட்டை பூசி இருக்கிறார்கள். இது கப்பலுக்கு கடல் நீருக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 317,000 கேலன்கள் வரை டீசலை சேமிக்கமுடிகிறது.

இந்த சிறப்பு இயந்திரத்தை ஒரு மீட்டர் சுற்றளவை கொண்ட பிஸ்டன் தண்டுகளை(rods) கொண்டு செய்து இருக்கிறார்கள்.


ஒரு கப்பலின் வேகத்தை Cruise Speed என்பார்கள். இதன் அளவுகோல் நாட்(knot).ஒரு சிறந்த சரக்கு கப்பலின் Cruise வேகம் 18 - 20 நாட். ஆனால், இந்த கப்பலின் நாட் 31 .

இந்த கப்பலின் அதிகபட்ச வேகம்...மணிக்கு 55.80 கிலோமீட்டர்.

சீனாவில் இருந்து கலிபோர்னியா துறைமுகத்தை இந்த கப்பலால் நான்கே நாட்களில் சென்று சேர்ந்துவிட முடியும்.

கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கிய வருடம், செப்டம்பர் 8 , 2006 .

இந்த கப்பலின் கட்டுமான செலவுகள் :145,000,000 அமெரிக்க டாலர்கள்.

Emma Maersk - சோமாலிய கொள்ளையர்கள் கையில் சிக்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

அறிவுக்கு அதிர்ச்சி:

மனிதன் மனம் விட்டு சிரிக்கும்போதெல்லாம், அவனது ஆயுட்காலம் கூடுகிறது என்பது அறிவியல் உண்மை.

ஆனால், சமிபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

அது, ஒரு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400 முறைகள் வரை சிரிக்கின்றது. ஆனால், வயது வந்த மனிதன் நாளொன்றுக்கு வெறும் 15 முறைகளே சிரிக்கிறான் என்கிறது.

இதைதான் கவிஞர் கண்ணதாசன் "பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா" என்றானோ.

அறிவுக்கு அழகு:




-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru