Thursday, June 2, 2011

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"


சீமான் :

"இலங்கை சென்று படம் எடுத்தவனை உதைப்பேன், மறுப்பேன், தடுப்பேன்" இலங்கைக்கு சென்று படப்பிடிப்பு நடத்த சென்றவர்களை கடுமையாக எச்சரித்தார் இயக்குனர் சீமான்.

இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம்..அவர் இயக்கிய "தம்பி" படத்தின் நாயகி....சிங்களத்தை தாய்மொழியாக கொண்ட, இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா.

"தம்பி" மற்றும் "வாழ்த்துக்கள்" ஆகிய இரண்டு படங்களிலும் அவரது நாயகன்....மாதவன். தமிழ் எழுததெரியாத, பீகாரை சேர்ந்த அவர் அடிக்கடி குறிப்பிடும் ஆரியர்.

விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் அன்பு தம்பி என்று தன்னையே அழைத்துகொண்டார் சீமான் .காவேரி, முல்லை பெரியார் உட்பட இங்கே இருக்கும் தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்காக ஒரு துரும்பை கூட தூக்கி போட இயலாதவர், பிரபாகரனுக்கு அடுத்ததாக இலங்கை தமிழ் மக்களின் நானே என்று பேசிவருகிறார்.

"தமிழ் மக்களுக்கு இன உணர்வே இல்லை,தமிழனிடம் ஒற்றுமை இல்லை, அதற்காகவே "நாம் தமிழர்" இயக்கம் தொடங்கி இருக்கிறேன் " என்று அறிவித்தார் சீமான்.

ஆனால், கன்னட நடிகையோடு அவர் காதலித்து ஊர் சுற்றிய விவகாரம் இப்போது வந்து இருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த, கன்னட நடிகையும்,தமிழில் "பிரெண்ட்ஸ்" போன்ற படங்களிலும் நடித்த விஜயலட்சுமி, சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கிறார்.

"இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

விஜயலட்சுமி வெளிப்படையாக அதுவும் காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருக்கிறார் என்றால், அவர் பக்கம் நியாயம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

"அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது" என்று சீமானின் வக்கீல் தெரிவித்து இருக்கிறார்.

திட்டமிட்டு சதி செய்யும் அளவுக்கு சீமான் இன்னும் அரசியலில் வளரவும் இல்லை. நடப்பது அவர்க்கு எதிரான திமுக அல்லது காங்கிரஸ் ஆட்சியையும் இல்லை.

தற்போது இலங்கை தமிழர்களின் போராளி என்ற "இமேஜ்" மக்களிடையே வளர்ந்து விட்டதால், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அந்த அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி இருக்கிறார் சீமான்.

"தம்பி"யில் சிங்கள நடிகையை பிரபல படுத்திய, "வாழ்த்துக்களில்" மலையாள நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்த, கன்னட நடிகையை காதலித்து "கழட்டிவிட்ட" நம் தமிழர் சீமான்.

குஷ்பூ:


"பெரியார் படத்தில், மணியம்மையாக ஒன்றிப்போய் நடித்ததில் இருந்து நடிகை குஷ்பூவுக்கு திராவிட இயக்க கொள்கைகளில் இருக்கும் ஈடுபாட்டை நான் கண்டு கொண்டேன் " - இவ்வாறு திமுகவில் நடிகை குஷ்பூ இணைந்தபோது போது சொன்னவர் முத்தமிழ் அறிஞர், திராவிட இயக்க வித்து கலைஞர் கருணாநிதி அவர்கள்.

"திருமணதிற்கு முன் யார் கூட வேண்டுமானாலும் படுக்கலாம்,ஆனால் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறி பெரும் தமிழ் புரட்சி செய்த குஷ்பூவின் திராவிட உணர்வுகளை அவர் நடித்த படத்தின் மூலம் கருணாநிதி "கண்டுகொண்டு" விட்டதை உணர்ந்து நமக்கு புல்லரிக்கிறது.

"பாதுக்காப்பாக திருடலாம் என்று சொல்வதற்கும், குஷ்பூவின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்று அவர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த சமயத்தில்,அவர்க்கு எதிராக செருப்பு வீசிய விடுதலை சிறுத்தைகள்,பாமக போன்ற கட்சிகள், நடிகை குஷ்பூ கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, அவர்க்கு ஆரத்தி எடுத்தி தமது "தமிழ் உணர்வை" நிருபித்தனர்.

அதன் பிறகு, ஒரு படப்பிடிப்பில் அவர் அம்மன் சிலைக்கு முன்னால் செருப்பு காலோடு அமர்ந்தது குறித்து ஒரு வழக்கு குஷ்பூ மீது பதிவு செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் குஷ்பூ மீது ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில்,தமிழ் மக்கள் மீதான அவரது கருத்து குறித்து அவதூறு வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

"இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக தமிழக மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர்" என்று தேர்தல் தோல்வி குறித்து குஷ்பூ தெரிவித்தார்.

மதுரையை எரிக்க "கற்ப்பை" நிருபிக்க முலையை திருகி எறிந்தாள் அந்த கண்ணகி.

ஆனால், நம் நவீன கண்ணகி குஷ்பூவோ,"காசுக்காக" ஜாக்கெட்டை கழட்டி எறியும் ஒரு நடிகை என்பதற்கு, பதிவுடன் உள்ள இப்படமே அத்தாச்சி.

கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3 ,அன்று நடைபெறப்போகும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு,சிறப்புரை வேறு ஆற்ற போகிறார் "தமிழ் மக்கள்" மீது காதல் கொண்டிருக்கும் குஷ்பூ.

வட இந்தியாவை சேர்ந்த, திருமணதிற்கு முன் யார் வேண்டுமானாலும் படுக்கையை பகிரலாம் என்று சொன்ன "நக்கத்" என்ற சினிமா கவர்ச்சி நடிகை "குஷ்பூ" , தமிழ் மக்களின் மீது, தமிழ் இனத்தின் மீது கொண்டு இருக்கும், அவரது "இன, மான உணர்வை" என்னவென்று சொல்வது??

சீமான், குஷ்பூ போன்றவர்களால், தமிழ் மக்களை விட பரிதாபத்துக்கு உரியதாகி விட்டது.."தமிழ் இன உணர்வு".

-இன்பா

10 comments:

ஸ்ரீனி said...

கவர்ச்சி படத்திற்கு நன்றி. நீங்க நல்லா இருக்கணும்

Anonymous said...

yow madhavan madraskaran ya ,avanga grand father chennai governor a irunthavar , cricket srikanth relation ,aama yaru sonna vijayalakshmi kannada nadikai nu ovalum tamil thaan , epdiyo seeman pera damage pannanum mudivu panniteenga , atthena sinna nadikai yoda compare panreenga , ishwarya rai , priyanka chopra nu ezhuthunga

Anonymous said...

Hi Kadaitheru,

Aana neenga solli irukaradhellam over. Seeman oru pakkam tamil makkalukaga poradittu dhan irukanga adhukaga ella poratathulaium avara edhir pakka mudiyadhu. Adhukaga avar thiyagi illainu sollaradhu thappu. Police la unga mela complaint yaravadhu pannitta udanae neenga manangettavan agida mudiuma? neenga evalo nallavaru. Kusbhu pesinadhu serinu naan solla varala neenga pottu irukara picture morphing pannadhu adhai oru saatchiya vera sollareenga. Sir yosichi padhivu podunga sir. Kevalama iruku kovam theriyala.

கவின் said...

பிரபலமானவர்களுக்கு கல் எறிந்து நீங்களும் பிரபலமாகிவிட வேண்டும் எனபது நீங்கள் இட்டிருக்கும் குஷ்புவின் படம் மூலமே தெரிகிறது. அதற்கு மேல் உங்களுன் வாதபிரதி வாதங்களுக்கு வரவில்லை. அப்படியே கருத்துக்களின் எண்ணிக்கை அளவை அதிரிப்பதற்காக என்னை திட்டுவீர்கள். நன்றி

மர்மயோகி said...

விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் இந்தியாவுக்கே துரோகம் செய்யத்தயங்காத தேசத்துரோகிகளுக்கு பெண்களுக்கு துரோகம் செய்வது சாதரணமய்யா!!!

Anonymous said...

சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்திருக்கும் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. காவல் துறையினரிடம் தனக்கும் சீமானுக்கும் இடையே இருக்கிற உறவுக்கான ஆதாரம் நிறைய இருப்பதாக கூறியிருக்கிறாராம் விஜயலட்சுமி.

Jayadev Das said...

\\"தம்பி" படத்தின் நாயகி....சிங்களத்தை தாய்மொழியாக கொண்ட, இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா.\\ யோசிக்க வேண்டிய விஷயம்.

குஷ்பு.... ஹா.. ஹா... ஹா.... புருஷனை வைத்துக் கொண்டு தினமும் ஒருத்தனுடன் ஊரைச் சுற்றுபபவள், இவளை கட்சியில் சேர்த்த மானங் கெட்ட வக்கத்த பயல்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு இவளே நல்ல உதாரணம்.

Anonymous said...

ambi.. enna ithu.. Kushbu anni padam romba super.....

R.Gopi said...

இன்பா.....

சீமான் பற்றி எழுதிய செய்தியில் நீங்கள் கஷ்டப்பட்டதை விட, குஷ்பு படத்துல உங்க கிராஃபிக்ஸ் ஒர்க்காக நீங்க கஷ்டப்பட்டத நினைச்சா புல்லரிக்குது...

Sekar said...

I guess you have just translated the article from dbs jeyaraj (traitor and a fan of Asin) blog. Tamils never hate anyone. "Pasinnu vandha pagaivanukkum unavalikkanum enbathu thaan namma virunthombal".

 
Follow @kadaitheru