Sunday, May 20, 2012

கடற்கரை


கவிதைக்காக வரிகள்
கோர்ப்பது போன்றது...
கடற்கரையில் சிப்பி சேகரிப்பது.

நம்
கடந்த கால டைரியின்
காதல் பக்ககங்களை மட்டுமே
புரட்டுகிறது கடல் காற்று.

ஆறறிவு படைப்பின்
அர்த்தம் புரிகிறது...
அலைகளோடு
நடக்கும் தருணங்களில்...

இதயத்தின் அறைகளில்
எதிரொலிக்கும் இசை இரண்டு...
ஆலய மணியோசை
அலையோசை.

சூர்யோதயம்
சந்ரோதயம் என
உலகின் மிக அழகான
இரு பூக்களை
தினமும் பூக்கும் ஒரே செடி...
கடல்.

போதி மரம் எதற்கு?
பக்கத்திலே  இருக்கிறது..
பவுர்ணமி நிலவும்..
கடற்கரையும்.

கலவி அனுபவம்
நிமிட கணக்கு.
கடுந்தவம் என்பது
வருட கணக்கு.

கணக்கில்லா மோனம்..
கடற்கரையில் நிற்றல்.

இன்று
எந்த  நேரமும்
சுனாமியாய்..
உலகை உள்வாங்க
தயாராகவே இருக்கிறது..

தின்று வீசிய குப்பைகளும்
(கள்ள) காதலர்கள் முத்தங்களும்
கொட்டிக் கிடக்கும் கடற்கரை..


கவிதை :  இன்பா

1 comments:

Unknown said...

nalla kavithai

 
Follow @kadaitheru