Saturday, May 5, 2012

"ஆ"தீனங்கள் - சில கேள்விகள்

"குரு மகா சன்னிதானத்திற்கு ஒரு சிறு காணிக்கையாக ஒரு கோடி ருபாய் பணமும், தங்க சிம்மாசனமும் கொடுத்து இருக்கிறோம்"  என்கிறார்  நித்தியானந்தா.

"பீடதி ஆசிரமத்தில் இளம் பெண்கள் நடனமாடியபடி ஜாலி மூடில் இறைவனை வழிபடுவது எங்களுக்கு பிடித்து இருந்தது. கொட்டிய  மழையையும் பொருட்படுத்தாது இளம் பெண்கள் நடனமாடினார்கள்.  அடடா...அதை காண கண் கோடி வேண்டும் "

- மேற்கூறிய விளக்கத்தை தந்து இருப்பவர் தவத்திரு முன்னாள் மதுரை ஆதினம் அருணகிரி.   நித்தியானந்தாவை 293 வது ஆதீனமாக முடி சூடியதற்கு அவர் தந்த விளக்கமே மேற்சொன்னது.


மேற்கண்ட இரண்டு அறிக்கைகளையும் படித்த பின்,  நமக்குள் எழுந்த  கேள்விகள் இங்கே..... பதில்கள் எங்கே?????

பீடதி ஆசிரமத்தில் ஏன் இளம் பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்?  இந்த ஆசிரமத்தில் சேருவதற்கு "இளம் பெண்"  என்கிற தகுதி(?) வேண்டுமா?
 

ஏன் இளம் ஆண்கள் அங்கு இல்லை?  

வயதான பெண்கள் நடனம் ஆடினால் அதை ரசிக்க முடியாது என்பதால்தான் இளம் பெண்களை நடனமாட அனுமதி வழங்கபடுகிறதா? 

 நித்தியின் வாக்குப்படி ஒரு கோடி ருபாய் சிறு காணிக்கை என்றால்,  பீடதி ஆசிரமத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?  இத்தனை கோடி பணம் பீடதிக்கு எங்கிருந்து, எப்படி வந்தது? சுவிஸ் நாட்டில் பணம் பதுக்கி இருக்கும் அமைச்சர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் கூட ஒரு நாள் மாட்டுவார்கள் என்கிற சிறு நம்பிக்கை நமக்கு  வருகிறது. 

ஆனால், இந்த மடாதிபதிகளின், ஆதீனங்களின்  அயோக்கியத்தனங்களுக்கு எப்போது ஒரு முடிவு கிடைக்கும்??

நித்தியானந்தா போல பணம் கொடுத்து, ஒரு ஆதீனத்தின் பதவியை வாங்கும் அளவுக்கு பழம்பெரும் ஆன்மிக மடங்கள் தரம் தாழ்ந்து போனதற்கு யார் காரணம்?
 
நித்தியானந்தா போன்றவர்கள் போலி என்று தெரிந்தும் ஐ. டி துறை உட்பட பல படித்த மக்கள் அவர்கள் பின்னால் போவது ஏன்?  


வெளிநாட்டுகாரர்கள் இவர்களை நம்புவதும், இவர்களிடம் டாலர்களை கொட்டுவதும் ஏன்?

மாதம்தோறும் உழைக்கும் சம்பளக்காரர்களிடம் TDS பிடிப்பதற்கு என்னை போன்ற சாமான்யனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கும்  வருமானவரி துறை,  பல கோடிகளை சேர்த்து வைத்து  இருக்கும் மடாதிபதிகளை,ஆசிரமங்களை ஏன் எந்த கேள்வியும் கேட்பதில்லை? ??

 
-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru