Monday, May 7, 2012

தாகூர் நினைவுகள்

"குறையிலா அன்பினிலே, கொடுப்பதனை ஏற்பதனால் குறைவதும் வாராது' கொடுப்பதனை எடுத்துக் கொள்"

 The sky is overcast with clouds
வானத்தை மேகம் கப்பிக் கிடக்கிறது

Where tireless striving stretches its arms towards perfection&
முழுமையை அடைவதற்கு முட்டாமல் முயன்றிடுவார்  "

- ரவீந்திரநாத் தாகூர்

இன்று வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்.  ஆம் ஆண்டு "கீதாஞ்சலி" என்ற தனது கவிதை நூலுக்காக நோபெல் பரிசு பெற்றவர். இப்பரிசினை பெற்ற முதல் ஆசிய நாட்டவர். இவர் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அவரது மிகவும் புகழ் பெற்ற  வங்காள கவிதை எஸ்.ஏ.பி அவர்களின்  தமிழ் மொழிபெயர்ப்பில்  இங்கே...



கோடைக் காலத்தின் திக்குத் தெரியாத பறவைகள்
என் ஜன்னலுக்கு வந்து பாடிவிட்டுப் பறந்து செல்லும்.
இலையுதிர்காலத்து மஞ்சள் இலைகள்
பாடல்களில்லாமல் சிறகடித்துப்
பெருமூச்சுடன் வீழ்கின்றன

ஓ! உலகின் ஊர்சுற்றிக் கூட்டமே
எனது வார்த்தைகளில் உங்கள்
காலடித்தடங்களை விட்டுச் செல்லுங்கள்

உலகம் தனது காதலருக்காக
பரந்துவிரிந்த முக மூடியைக்
கழற்றிக் காட்டுகிறது.

அது ஒரு பாடலைப் போலச் சிறிதாய் வருகிறது
ஆதியும் அந்தமுமற்ற ஒரு முத்தம் போல.

பூமியின் கண்ணீர்த் துளிகள் அவளது
புன்னகையை மலரச் செய்கிறது.

வல்லமை கொண்ட பாலைவனம் எரிகிறது
நீண்ட புல்லின் காதலுக்காக,

அது தனது தலையை ஆட்டிச் சிரித்து
விட்டுப் பறந்தோடும்.

நீ கண்ணீர் விட்டால்
சூரியனைக் காண முடியாது

மேலும் நட்சத்திரங்களையும் கூட.
உன் வழியில் கிடக்கும் மணல்வெளி
உன் பாடலையும் சிறகடிப்பையும்
நாட்டியமாடும் வெள்ளத்தையும்
யாசகம் கேட்கிறது

மணலின் செயலற்ற சுமைகளை
நீ சுமந்து செல்வாயா?

அவளின் பெருஆவலுடைய முகம்
இரவு மழைபோல எனது கனவுகளை
அடிக்கடி தூண்டுகிறது

ஒரு காலத்தில் நமது கனவில்
அந்நியமாய் உணர்ந்தோம்
கண்டுபிடிக்க நாம் கண்விழித்தோம்
நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோம்

அமைதி மரங்களுக்கிடையே
மாலைநேரம் தவழுதல் போல்
கவலைகள் என் இதயத்தில்
அமைதியாய் அடங்கிவிட்டன

சில கண்காணா விரல்கள்
சோம்பேறித் தென்றலைப் போல்
என் இதயத்தின் மீது சிற்றலைகளாய்
கீதமிசைக்கின்றன.

உன்மொழி என்ன, ஓ! கடலே?
“ஆதியும் அந்தமுமற்ற மொழி”
உன்மொழி என்ன, ஓ! வானமே?
“ஆதியும் அந்தமுமற்ற மௌனம்.”

என் இதயமே,கவனி
உன்னிடம் காதலை உருவாக்கும்
உலகின் கிசுகிசுப்பை

கடவுள் நமக்கு அனுப்பும் மலர்களுக்கு
விடைகளை எதிர்பார்க்கிறார்
சூரியனுக்கும் பூமிக்கும் அல்ல

அவன் ஆயுதங்களையும் கடவுள்களையும்
படைத்துக் கொண்டான்
அவனது ஆயுதங்கள் வெல்லும்போது
அவனே தோற்றுப் போகிறான்

கடவுள் தானே படைக்கப்பட்டதை
தானே உணருகிறார்


-இன்பா  

0 comments:

 
Follow @kadaitheru