Thursday, August 2, 2012

காத்திருப்பு

ஒரு பிரிவின் வலி..

ஒவ்வொரு ஞாயிறு

உறங்கப்போகும் போதும்.


திங்கட்கிழமை காலைப்பொழுதுகளில்

தொடங்கிவிடுகிறது

ஞாயிற்றுக்கிழமைக்கான

காத்திருப்பு.


அவசரகதி இயந்திரஒட்டம்

அரைகுறை உணவு என

இரண்டு சக்கரங்கள்

ஞாயிறு தவிர

வாரத்தின்

மற்ற நாட்களுக்கு.


நிம்மதிப் பெருமூச்சு வரும்

அலுவலகம் முடியும்

ஓவ்வொரு

சனிக்கிழமை மாலையும்

தியான அநுபவம்.


நிதானவிழிப்பு

காபி அருந்தியபடி

வாசிப்பு

விரும்பிய உணவு

மதிய உறக்கம்

பிடித்தச் சேனல்

இப்படி

பணிச்சுமையை

இறக்கிவைக்கும்

நாளல்லவா ஞாயிறு?


"வீட்லேயே அடைஞ்சு இருக்கேன்.

நாளைக்கு..." என இழுக்கும்

என் மனைவிக்கு

தெரிந்திருக்க நியாயமில்லை

இந்த

ஒரு நாள்

வரம் வாங்க

நான் இருக்கும்

ஆறு நாள் தவத்தை.



கவிதை : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru