Sunday, July 8, 2012

'சாணக்யன்' தந்திரம்


மனிதன் தனியாகவே பிறந்தான். தனியாக இறக்கின்றான். நல்லதோ, கெட்ட கர்மவினையோ தனியாக அனுபவிக்கிறான். இறுதியில் சொர்க்கமோ, நரகமோ கடைசியில் தனியாகவே செல்கிறான்.

ஒரு மனிதனின் உயர்வு அவனது செய்கையால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. அவனது பிற்ப்பால் அல்ல.

ஒரு மனிதன் எப்பொதும் அதீத நேர்மையுடன் இருக்ககூடாது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.அதுபோலவே நேர்மையான மனிதனே முதலில் தண்டிக்கபடுகிறான்.

ஒரு வேலையை தொடங்கும் முன், மூன்று கேள்விகளை உன்னுள் கேள்.

   1..இதை நான் ஏன் செய்கிறேன்?
   2. இதன் விளைவு என்ன?
   3. தற்பொது இதில் நான் வெற்றிபெறுவேனா?

இந்த கேள்விகளுக்கு ஆழ்ந்த சிந்தனைக்குபின் உண்மையாகவும், திருப்திகரமாகவும் விடைகள் உன்னுள் கிடைத்தப்பின், காரியத்தை செய்யத் தொடங்கு.

முட்டாளுக்கு புத்தகம் அறிவைத் தரும் என்பது கண்ணாடி குருடனுக்கு பார்வையை தரும் என்பதை போலாகும்.

கல்வியே உண்மையான நண்பன். கற்றவன் எங்கும் மதிக்கபடுகிறான். கற்றவனின் அழகு இளமை அழகைவிட மேலாக காட்டுகிறது.

பாம்பு தற்போது விஷமற்றதாக இருக்கலாம். ஆனாலும், அது எப்பொதாவது விஷத்தை கக்கும் என்பதில் அவதானமாக இரு.

கடவுள் சிலைகளில் இல்லை. உன்னுள் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு கடவுளே. அதனை உள்ளிருந்து உருவாக்கும் ஆத்மனே கோயில்.

0 comments:

 
Follow @kadaitheru