Sunday, October 14, 2012

'கரண்ட்கம்பியில்' காக்கைகள்

உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற பொதிலும்
அச்சமில்லாதவர்கள்
நாங்கள்.

கனவுகளில் மட்டுமே
சாத்தியம் எங்களுக்கு.
சொந்தக்காலில்
நிற்குமொரு வாழ்க்கை

'கரண்ட் கம்பி'களில்
உட்காரும்
காக்கைக் கூட்டம்.
கட்டியிருக்கும்
மூங்கில் கழிகளில்
நாங்கள்.

எங்களின்
பிரிக்கமுடியாத
ஆறாம் விரலானது
'பெயிண்ட் ப்ரஷ்'

நிறமாற்று திறன்
பச்சோந்திகளுக்கு மட்டுமல்ல.
எங்களுக்கும்தான்.

உற்றுப் பார்த்தால்
மட்டுமே தெரியும்.
சிமெண்ட் கலவைக்கும்
எங்கள் 'கலரு'க்கும்
உள்ள வேறுபாடு.

கட்டங்களுக்காக
கொள்ளை போகும்
ஆற்றுமண்லொடு
குழைக்கபடுகிறது
எங்களின் வியர்வை.

நாங்களும்
'மகாத்மா'க்களே.
எப்பொதும்
இடுப்புத்துணி மட்டுமே
அணிவதால்.

பணக்கார பருந்துகளுக்காக
உயர..உயர
பறக்கும்
ஊர்க்குருவிகள்
நாங்கள்

அடுக்கிவைக்கும்
ஒவ்வொரு செங்கல்லிலும்..
திட்டம்போட்டு
எங்கள் பெயரை
எழுதிவைத்தவன் யார்?

கவிதை : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru