Sunday, September 19, 2010

இரண்டு 'எந்திரன்'களின் கதைகள்


எந்திரன் கதை # 1 :

உலகிலேயே மிக அதிகமான அளவில் வயதானவர்கள் வாழும் நாடாகிவிட்டது ஜப்பான். சமிபத்தில் நடந்த ஒரு சர்வேபடி, 100 வயதுக்கும் மேற்ப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 449 ஆகும். இது மேலும், நான்காயிரம் அதிகரிக்கும் என்று வேறு அரசு அறிவித்து இருக்கிறது.

இதனால், மனிதர்களின் வேலைபளு வீடுகளில் அதிகரித்து விட்டது. இதனை சமாளிக்க ஒரு புதிய ரோபோவை உருவாக்கி இருக்கிறது கவாடா நிறுவனம். இதன் தயாரிப்பில் ஜப்பான் தேசிய அறிவியல் கழகமும் இணைந்து இருக்கிறது.

ஹெச்.ஆர்.பி & 4 என்பதுதான் இதன் பெயர். இதன் உயரம் 151 செமி. இதன் எடை 39 கிலோ.

நமது கட்டளைகளை புரிந்துகொண்ட, அதற்க்கு ஏற்ப இயங்கும் இதன் விலை இந்திய மதிப்பில் 1.44 கோடி ருபாய்.

எந்திரன் கதை # 2 :

தன்னுடைய தனிப்பட்ட பணிகளுக்காக ஒரு ரோபோவை உருவாக்குகிறார் ஒரு விஞ்ஞானி.

ஒரு கட்டத்தில், மனிதனை போலவே உணர்வுகள் பெறும் அந்த ரோபோ, விரும்பும் பெண்ணையே விரும்ப ஆரம்பிக்க,அதன் பின் வரும் பிரச்சினைகள்தான் ஷங்கரின் எந்திரன் படத்தின் கதை என்கிறார்கள்.

கடைக்காரர் கமெண்ட்:
அதுசரிங்க,டாஸ்மாக் சரக்கு அடிக்கும் போது, கொஞ்சமா குடிச்சி கம்பெனி குடுக்கிற மாதரி எதாவது 'எந்திரன்' வருமா?


-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru