Tuesday, September 14, 2010

சிந்து சமவெளியில் ஒரு "சாத்தான்" சாமி


மாமனார் - மருமகள் காதல், மருமகன் - மாமியார் காதல் போன்ற புரட்சிகரமான செய்திகளை(!) தனது படங்களில் சொல்லி,முதன்முதலில் புதுமை செய்தவர் கே.பாலசந்தர். எதிர்நீச்சல்,உன்னால் முடியும் தம்பி என்று சில அற்புதமான படங்களை தந்த பெரிய இயக்குனர்தான், என்றாலும் தமிழ் சினிமாவில் அறிவுஜீவித்தனம் என்று நினைத்துகொண்டு அவர் போட்டிருக்கும் குப்பைகளும் பல. கல்கி,பார்த்தாலே பரவசம் என்று அடுக்கிக்கொண்டுபோகலாம். இரண்டு பொண்டாட்டிகாரன் கதைகள் பண்ணுவதில் அவருக்கும்,பாலு மகேந்திராவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது என்று சொல்லலாம்.

லூசுத்தனமான சேஷ்டைகளுடன் கேணத்தனமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் ஏதாவது தொலைகாட்சியில் பாரிக்க நேரிட்டால், அது கே,பாலச்சந்தரின் படம் என்று அடித்து சொல்லலாம்.

ஒரு வழியாக கே.பி out of form ஆகி விட்டார் என்று பார்த்தால், உறவுகளை கொச்சை படுத்துவதில் அவரையே மிஞ்சிவிடும் அளவுக்கு விஸ்வருபம் எடுத்து நிற்கிறார் இயக்குனர் சாமி.

இயக்குனர் சாமியின் இரண்டாவது படமான "சிந்து சமவெளி"யின் கதை இதுதான். மனைவியை பிரிந்து பல வருடங்களுக்கு பின் ஊருக்கு வருகிறார் ஒரு ராணுவ வீரர்.அந்த சமயத்தில் அவர் மனைவி பாம்பு கடித்து இறந்துவிட, பதினேழே வயதான தன் மகனுக்கு,அவன் விரும்பிய பெண்ணை மணமுடிக்கிறார். நான்கு நாட்கள் வாழ்ந்துவிட்டு,புதுமனைவியை அப்பாவின் பொறுப்பில் விட்டுவிட்டு, படிப்பை தொடர வெளியூர் செல்கிறான் அவன். இந்த 'கேப்'பில் ராணுவ வீரருக்கும்,அவர் மகள் போல இருக்கும் மருமகளுக்கும் இடையே கள்ளஉறவு மற்றும் காதல் ஏற்படுவதாக கதை போகிறது.

ஒரு ரஷிய நாவலை,தமிழுக்கு அல்லது தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றதுபோல,ஜெயமோகன் நாவல் வடிவம் தந்து இருக்கிறார். பின்,அதை படமாக எடுத்திருக்கிறார் சாமி.இத்தனைக்கும்,படத்தில் ஹை லைட்டான பகுதி , கதாநாயகன் காதலித்து திருமணம் செய்கிறார்.உறவுகளோடு,காதலையும் வாரிஇருக்கிறார் சாமி.

"விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா? நான் எங்க போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்த தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் இது. " என்று தெரிவித்து இருக்கிறார் சாமி.

நான் ஒன்றும் அவர் கூறும் கலச்சார காவலன் என்று இதை எழுதவில்லை.படம் பார்த்ததும்,எனக்குள் எழுந்த கேள்விகள் சில.

1.எல்லாரும் பே(ஏ)சும் அளவுக்கு அதில் என்னதான் இருக்கிறது என்று ஒரு சாமானிய ரசிகனின் ஆவலே(??) என்னையும் படம் பார்க்க தூண்டியது என்று நினைக்கிறேன்.இதைபோலேவே, இப்படம் பற்றிய சர்ச்சையால் தூண்டப்பட்டு படம்பார்த்தவர்களே அதிகமாக இருந்திருக்கும் இல்லையா?.

2.உலகத்தில்,நம் சமுகத்தில் நடக்காததையா காட்டுகிறேன் என்று வேறு கூறுகிறார். ஏன் நல்ல விஷயங்கள் எதுவுமே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??

3.இந்த படம் பற்றிய சர்ச்சையை, முதலில் ஆரம்பித்துவைத்தது சன் டிவிதான்.

"உங்க கார்ல வீசப்பட்ட கல் ஒரு பப்ளிசிட்டிக்காகதான்னு போலீஸ் சொல்லுதே? " என்ற கேள்விக்கு சாமி தந்த பதில்.

"அப்படி ஒரு கேவலமான வேலைய நான் செய்ய மாட்டேன். சன் நியூஸ்ல அப்படி சொல்லப்பட்டதும் நான் அவங்களுக்கே போன் பண்ணி கேட்டேன். போலீஸ்லதான் சொன்னாங்கன்னு அவங்க பதில் சொன்னாங்க. போலீஸ்ல கேட்டப்போ நாங்க சொல்லல என்றார்கள். பிறகு நான் கொடுத்த விளக்கத்தையும் சன் டிவியில் ஒளிபரப்பினாங்க. என் வீட்ல கல் எறியுற வரைக்கு வர்ற போன் கால்களை குறிச்சு வச்சுக்கணும்னு நினைக்கலே. நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிய பிறகு இப்போ எந்த மிரட்டலும் வர்றதில்லை"

இதில் எது நிஜம் எது பொய்?
சன் டிவிக்கு வேறு உருப்படியான செய்திகள் கிடைக்கவில்லை என்றால் இப்பத்தான் வெறும் வாயில் அவல் மெல்வார்களா?.

4.இப்படத்தை தனது மனைவி மற்றும் தந்தையோடு பார்ப்பாரா இயக்குனர் சாமி?.அப்போது அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

5.இது போன்ற படங்கள், 'அது' மாதரி எண்ணங்கள் இல்லாதவரையும் 'அது' போல யோசிக்க தூண்டும் என்பது எத்தனை சதவிதம் உண்மை??

"சாத்தான்" பாணி கதைகள் செய்யும் "சாமி", தனது கதைகளால் பேசப்படுகிறாரோ இல்லையோ..ஒவ்வொரு முறையும் தனது படங்களுக்கு உருவாக்கப்பட்ட அல்லது உருவாகும் சர்ச்சைகள் மூலம் 'பூதா'கரமாக தமிழ் சினிமாவில் பேசப்படுவார் என்று தோன்றுகிறது.


-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru