Friday, September 17, 2010

அந்தக்காலம் இனி வருமா?

வயல்வெளி பார்த்து வரட்டி தட்டி
ஓணான் பிடித்து ஓடையில் குளித்து
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் ஒரு அயல்நாட்டுக்கு.

கணிப்பொறியோடு சிறிதாய் தூங்கி..
கனவுதொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க.

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ?
மவுஸ் தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்வு தொலைந்து போகுமோ?

சொந்த,பந்த உறவுகள்
எல்லாம்
'ஜிப்' பைலாய்
சுருங்கிபோகுமோ?

நண்பர்கள் கூட்டம்
'சாட்' ரூமுக்குள்
மூச்சு திணறுமோ?

தாய் மடியில் தலை வைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த
காலம்தான் இனி வருமா?
இதயம் நனைத்த அந்த வாழ்வு அடுத்த தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு சோறு
உண்ணும் வாழ்க்கை
வெறும் கனவு.
தினமும் என்னை
தின்னும் பழைய நினைவு.


(நன்றி : திரு.ரவீந்திரன்)

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru