Monday, January 18, 2010

'அசல்' - எழுத்தாளர் அஜித்

"இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி முடிப்பதற்க்குள் இருக்கிற கொஞ்ச தலைமுடியும் கொட்டிவிட்டது " என்று "வள்ளி" பட ஸ்க்ரிப்ட் எழுதிய போது சொன்னார் ரஜினி. "எழுதுவது என்பது ஒரு பிரசவ வலி" என்றார் கமல்.

இந்த வரிசையில் இன்னொரு முன்னணி நடிகரும் இணைந்து இருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் ஒரு படத்தின் டைட்டிலில் கதை-திரைக்கதை ஒத்துழைப்பு என்று அவர் பெயரும் இடம் பெறுகிறது.

அந்த நடிகர் 'தல' அஜித். படம் அசல்.

"அசல் படத்தில் அஜித் அவர்களின் பங்களிப்பு கதையில் மட்டும் இல்லாமல் திரைக்கதை மற்றும் வசனங்களிலும் அதிகம் இருக்கிறது. அதற்க்கு விலை மதிக்க இயலாது. ஸ்க்ரிப்டில் உருவெற்றிய விஷயங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் மெருகு ஏற்றி இருக்கிறார் இயக்குநர் சரண் " என்கிறார் படத்தின் விவாதம் மற்றும் ஸ்க்ரிப்டில் பணிபுரிந்த எழுத்தாளர் யூகிசேது.

வில்லன் மற்றும் ரமணா போன்ற பெரும் வெற்றி படங்களில் ஏற்கனவே யூகிசேது பங்குபெற்று இருக்கிறார்.

"முதல் முறையாக அஜித்தின் பெயர் எழுத்தாளர் என்ற தலைப்பில் இடம் பெறுவது எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு பெருமை தரும் விஷயம். எழுத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதால்தான் தன்னையும் அதில் இணைத்து கொண்டு இருக்கிறார் அஜித் " என்று கூறுகிறார் யூகிசேது.

ஆரம்ப கட்டங்களில் தான் நடிக்கும் படங்களின் கதையே கேட்காத அஜித் , இன்று அசல் படத்தில் எழுத்து வேலைகளில் இறங்கியது எப்படி?

"அவர் 49 படங்களில் நடித்து இருக்கிறார். இதில் ஆர்வம் என்பதை விட, அனுபவம் அவருக்கு நிறைய உள்ளது. சொல்லும் கதை, எளிமையாக இருக்கவேண்டும். அப்போது தான் அது சி சென்டர் ரசிகர்களுக்கும் சென்றடையும் என்பதில் அஜித் தீர்மானமாக இருந்தார். முழுக்க வெளிநாடுகளில் எடுக்க பட்டாலும், ஆங்கில வசனம் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டார்" என்று தனது அனுபவங்களை பகிர்கிறார் சரண்.

"அவருக்கு இருக்கும் அனுபவத்துக்கு அவர் விரைவில் படம் டைரக்ட் செய்தாலும் ஆச்சிரிய படுவதார்க்கு இல்லை " என்று ஒரு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் சரண்.

ஒரு பைக் மெக்கானிக் என்று தொடங்கிய அஜித்தின் வாழ்க்கை பயணம், நடிகர், விளையாட்டு வீரர், ஏரோனாடிக்ஸ் என்று பல பரிணாமங்களை வெளிப்படுத்தியதை போலவே, இயக்குனர் என்ற பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்போம்.

இது பற்றிய ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் தந்தார் அஜித்.

"ஒரு படம் நல்லா வரணும்னா டீம் வொர்க் ரொம்ப அவசியம். நான் நடிக்கிற படம் சிறப்பா வர என்ன என்ன செய்யணும்மோ அதை செய்யறேன். ஒரு நடிகனா நிலையான இடம் கிடைச்சு இருக்கு.தனியா ஒரு படம் இயக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா நான் பின் வாங்க மாட்டேன் ".

'அஜித்' என்பது தன்னம்பிக்கையின் மறு பெயர்.

பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru