Monday, January 4, 2010

'அசல்' இசை


தனது குருவான கே. பாலச்சந்தரை போலவே இசை ரசனையும், கவிதைகள் வாசனையும் உடையவர் சரண். வைரமுத்து அவர்கள் தான் எழுதிய கவிதைகள் சிலவற்றை ஒரு ஆல்பமாக உருவாக்க தெரிவு செய்த இயக்குநர் சரண்.

சரண் - பரத்வாஜ் - வைரமுத்து கூட்டணி இணைந்த படங்களில் மறக்கமுடியாத, மிகவும் ஹைலைட்டான ஒரு பாடல் தாமாகவே அமைந்துவிடும். 'உன்னை பார்த்த பின்புதான்' - காதல் மன்னன், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' - அமர்க்களம், 'என்னக்கென ஏற்க்கனவே ' - பார்த்தேன் ரசித்தேன், 'உனை நான் ' - ஜெஜெ இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு இடைவேளைக்கு பின் 'அசல்' படத்தின் மூலம் சேர்ந்து இருக்கும் இந்த அணியில் புதியதாக இசையில் இணைந்து இருப்பது ஸ்காட்லாண்ட் நாட்டை சேர்ந்த, ஐரொப்பாவில் மிகவும் புகழ் பெற்ற இசை குழுவான
Y-KINZ.

" நாங்கள் படத்தின் கதைக்கு ஏற்ப, ஒரு சிறந்த பாடலை முதலில் உருவாக்கி விடுவோம். அந்த பாடலை அளவு கோலாக வைத்து, படத்தின் மற்ற பாடல்களை உருவாக்குவோம்" என்று சரண் மற்றும் பரத்வாஜ் உடனான தனது அனுபவங்கள் பற்றி கூறினார் கவிஞர் வைரமுத்து.

அசல் பாடல்களை கேட்ட போது, எது அந்த அளவுகோல் பாடல் என்று கணிக்க முடியவில்லை.

படத்தில் 7 மொத்தம் பாடல்கள்.

1 . அசல்
பாடியவர் : சுனிதா மேனன்

"காற்றை அழைத்து கேளு...கடலை அழைத்து கேளு" என்று தொடங்கும் பாடல். அடடா தல போல் வருமா என்று சுனிதாவின் கிறங்க அடிக்கும் குரலில் 'தல' புகழ் பாடும் பாடல். டைட்டில் பாடல் என்று நினைக்கிறேன்.

பாடல் கம்பொஸிங்கில் drams பயன்படுத்தபட்ட விதம் அருமை .

2. குதிரைக்கு தெரியும்.
பாடியவர் : சுர்முகி , ஸ்ரீசரண்.

ஒரு பாப் பாணியில் உள்ள பாடல். "எனக்கு ஒரு ஜாக்கி நீ என்று " என வரும் பாடலின் வரிகள் சில இடங்களில் கொஞ்சம் ஓவர். ஹாட் டுயட் பாடல். peppy music and fresh tune.

3.அதிரி புதிரி பண்ணிக்கடா எதிரி உனக்கு இல்லையடா
பாடியவர் : முகேஷ்,ஜனனி

மற்றொரு super டுயட் பாடல். "கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே " என்ற வரியில் வைரமுத்து இன்னும் இளமையா இருக்கிறார்

அதிரடியான பின்னணி இசை.

4. எங்கே எங்கே மனிதன் எங்கே
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்.

ரொம்ப நாளைக்கு பின் ஒரு நல்ல தத்துவ பாடல். துரோகத்தால் பாதிக்க பட்ட ஒரு மனிதனின் மனோ நிலையில் எழுதப்பட்ட பாடல். "வலிகளால் வாழ்க்கையில் ஞானம் கண்டேன் " என்று படத்தின் கதையை உணர்த்தும் பாடல்.


5. எங்கே எங்கே மனிதன் எங்கே
கார்த்திகேயன் மற்றும் குழுவினர்.

இரண்டாவது முறையாக பாடல் இடம் பெறுகிறது.

6. ஏய் துஷ்யந்தா..
பாடியவர் : சுர்முகி,குமரன்.

எல்லாரையும் ரீச் ஆகும் டுயட் பாடல்.

7.எம் தந்தைதான்..
பாடியவர் : பரத்வாஜ்


"விண்மீன்கள் கடன் கேட்க்கும் அவர் கண்ணிலே " பரத்வாஜீன் சோகமாயமான குரலும், வைரமுத்துவின் பாடல் வரிகளும், அதற்கு ஏற்றது போல மென்மையான இசையும் கை கோர்த்து இருக்கின்றன.


மொத்தத்தில் அசல் இசை - அல்டிமேட் ஸ்டாருக்கு ஏற்ற ஒரு அல்டிமேட் இசை.






பதிவு : இன்பா

4 comments:

Unknown said...

Download Asal Mp3 Songs - http://moviegalleri.blogspot.com/2010/01/asal-mp3-songs-free-download-download.html

ரமேஷ் கார்த்திகேயன் said...

குதிரைக்கு தெரியும் பாடல் நல்ல இருக்கு

Loganathan - Web developer said...

சரண் அவர்களின் படம் பாடல்கள் அனைத்து அருமையாக வந்துள்ளது. அசலும் அதுபோல்தான்....

R.Gopi said...

அஜித் வாயில இம்மாம்பெரிய சுருட்டு இருக்கே...

அன்புமணி ராமதாசு ஏதாச்சும் சொல்ல மாட்டாரா???

 
Follow @kadaitheru