Sunday, November 9, 2014

நடிப்பு,விபச்சாரம்,கவிதை - ஒரு நடிகையின் பயணம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருது பெற்றவர் ஸ்வேதா பாசு.

ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலில் வைத்து விபச்சாரம் செய்ததாக நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஸ்வேதா பாசுவின் தனிமனித உரிமையை பாதிப்பதாகும் என அவரது தாயார் அளித்த மனுவின் காரணமாக ஸ்வேதா பாசுவை அவரது தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து முதல்முறையாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஸ்வேதா பாசு.

"நான் எதையும் சொல்லாமல் அவர்களாகவே எழுதிய பத்திரிகையாளர்கள் தவிர மற்ற யார் மீதும் நான் குறைகூற விரும்பவில்லை. என்னுடைய விளக்கத்துக்காக அவர்கள் காத்திருந்திருக்க வேண்டும். நான் காவலில் இருந்ததால் எதையும் விளக்க முடியவில்லை. எனது தாய் தந்தையருடன் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை.

என்னைப் பற்றி எழுதப்பட்ட செய்திகளால் என்னை சுற்றி உள்ள கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. இருந்தபோதும் திரைப்படதுறையில் எனக்கு ஆதரவு இருந்தது.

என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை. எனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. விபசாரத்திற்காக எந்த ஏஜெண்டும் என்னை ஹைதராபாத் அழைத்து செல்லவில்லை.

ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தேன். அடுத்த நாள் காலையில் போக வேண்டிய விமானத்தை தவற விட்டேன். என்னுடைய பயணம் மற்றும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை விருது வழங்குபவர்கள் செய்து இருந்தனர்.

அந்த டிக்கெட் என்னிடம் தான் உள்ளது. சூழ்நிலையால் நான் பாதிக்கபட்டுள்ளேன். உண்மை இல்லாதது வெளியே சொல்லப்பட்டு உள்ளது.

நான் மனம் சோர்வடைந்துவிடவில்லை. எனக்கு உண்மை தெரியும். அதிர்ஷ்டவசமாக நான் விடுதலையானேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பம் இருந்தது. எனது பெற்றோர்கள் நான் எப்போதும் ஒரு கண்ணியமான் வாழ்க்கையை தொடர விரும்பினர். "

இவ்வாறு ஸ்வேதாபாசு கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிப்பு, விபச்சார வழக்கு என்று சென்ற அவர் பயணம் இன்று ஒரு பக்குவப்பட்ட கவிஞராக முடிந்து இருக்கிறது.

தற்போதைய உணர்வுகளை பின்வரும் கவிதையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்வேதாபாசு.

"எனக்கு தற்கொலை அல்லது ஏதாவது செய்து கொள்ள தெரியவில்லை.

உங்களுக்கு தெரியுமா ! நான் பறக்க எண்ணினேன் மற்றும்
எல்லாவற்றிற்கும் மேலாக இருக்க எண்ணினேன்.."

இடியோசை கேட்கிறது ! நான் தனியாக இருக்கிறேன்

நான் ஒரு மலையின் விளிம்பில் நிற்கிறேன்.
நான் அடர்ந்த காட்டில் உருட்டப்பட்டேன்
அங்குள்ள பழங்குடியினர் மற்றும்
நாடோடிகள் மலையில் இருந்து
குதிக்க சொல்கிறார்கள்

நான் நிர்வாணமாக கீழே பார்க்கிறேன்!
குளிரால் நடுங்குகிறேன்,

மூர்க்கத்தனமான கடல்
அது என்னை விழுங்க வாய் திறந்து தயாராக உள்ளது

இருட்டில் பகுதியில் கர்ண கொடூரமான அலறல்கள்
நான் கடலில் குதிக்க முடிவு செய்து விட்டேன்

அப்போது நான் ஒரு பிரகாசமான
நட்சத்திரத்தைப் பார்த்தேன்....

-ஸ்வேதாபாசு


சாதாரணமானது அல்ல சினிமா நடிகையின் வாழ்க்கை. அது
சாதா 'ரணமானது' என்று நமக்கு புரிய வைக்கிறது ஸ்வேதாவின் வாழ்க்கை.

1 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

இதை யாராவது புரிந்து கொள்ள முயற்சி செய்தால் நல்லது .அவளும் பெண்தானே.

 
Follow @kadaitheru