Thursday, November 27, 2014

'அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை' - சீமான்


 'அரசியலுக்கு வர ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை " என்று கூறி இருக்கிறார் சீமான்.

அவர் விடுத்துள்ள அறிக்கை இங்கே...

"ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைக்கிறார்கள். மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது?

நம் மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இயற்கையை காக்க தங்கள் வாழ்க்கையை அற்பணித்த பலர் இருக்கையில் எதற்காக ரஜினியை முன்னிறுத்துகிறார்கள்.

அதை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர். இந்த தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

ரஜினி மக்களுக்காக ஏதாவது ஒரு விஷயத்திலாவது உறுதியாக இருந்துள்ளாரா?

அரசியலுக்கு அவர் வரட்டும் பார்த்துவிடலாம்.

அவர் தனியாக வந்தாலும் சரி, கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும் பிரபாகரனின் தம்பிகளா? அல்லது ரஜினி ரசிகர்களா? என்று பார்த்துவிடலாம்.

2016ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா இல்லை கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறார்கள். தனித்து தான் போட்டி என்று நாம் பலமுறை சொல்லிவிட்டோம். வாழ்வோ, சாவோ தனித்து தான் போட்டி.

இங்கே எதற்காக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா? சோனியா அன்னை ஆகலாம், நேரு மாமா ஆகலாம். ஆனால் தமிழுக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாகக் கூடாதோ? அண்ணன் வழியில் நம் பயணம் தொடரும்

-என்றார் சீமான்.

ஈழத்தமிழர்கள் முதுகில் ஏறி 'தலைவர்' ஆக துடிக்கும் சீமான், ஏன் தனித்து போட்டியிட வேண்டும்?

. இவர் குறிப்பிட்டு இருக்கும் நல்லக்கண்ணு, நெடுமாறன்  ஆகியோரை முன்னிறுத்தலாமே???

அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதியில்லை என்றால், ஊருக்கு ஊர் 'பிரபாகரன்' பட்த்தை போட்டுக்கொண்டு உண்டியல் குலுக்கும் சீமானுக்கு, தமிழினத்தை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை.

ஒவ்வொரு முறை சீமானின் வாய்ச்சவடால்களை கேட்டும்பொதெல்லாம், பின்வரும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

"கேக்கறவன், கேணையா இருந்தா....."

0 comments:

 
Follow @kadaitheru