Monday, February 7, 2011

கல்வி விளக்கேற்றும் INFOSYS

இளமையில் வறுமை கொடிது என்ற வாசகத்தை விட, நல்ல கல்வித்திறன் இருந்தும் வறுமை என்பதே மிகவும் கொடுமையானது.

நம்மை சுற்றி, நமக்கு தெரிந்தவர்கள் மத்தியில் நல்ல திறமைகள் இருந்தும் முறையான கல்வி கற்க வசதியில்லாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து, என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு பெண் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார். குறிப்பாக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் பெண்கள் பலர், வீட்டின் வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்கஇயலாமல் இருப்பது கண்கூடு.

ஏழை மாணவர்களுக்கு கல்வி தரும் மகத்தான சேவையை துவக்கி இருக்கிறது....பிரபல சாப்ட்வர் நிறுவனமான INFOSYS.

இந்நிறுவனத்தில் நான் முற்றிலும் வெறுக்கும் ஒரே விஷயம்...இந்நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டுமானால், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரியின் அனைத்து செமஸ்டர்களிலும் 60 % மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது. நடைமுறையில் இது கிராமபுற மாணவர்களுக்கு எதிரானது என்பது என் கருத்து. பல நல்ல மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்பதும் என் கருத்து.

INFOSYS நிறுவனத்தின் அறக்கட்டளை குழுவான NGO-Prerana துவங்கி இருக்கும் இந்த சேவை பெறுவதற்கு மாணவர்களுக்கு . இரண்டே இரண்டு விதிமுறைகள் மட்டும் இருக்கின்றன.

ஒன்று, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 80 % மதிப்பெண்கள் பெற்று இருக்கவேண்டும்.

இரண்டு, NGO-Prerana நடத்தும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்

இந்த இரண்டு தகுதிகளும் இருந்தால் போதும்... தகுதி பெறும் மாணவர் விரும்பும் வரை, மாணவரின் மேற்படிப்புகள் அனைத்துக்கான மொத்த செலவுகளை இந்நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும், ஏழை மாணவர்களுக்கும் இந்த விவரங்களை கண்டிப்பாக அளியுங்கள்.

NGO-Prerana இது குறித்தான தொடர்புகளுக்கு,

1 . திருமதி.சரஸ்வதி, மொபைல் எண் : 99009 06338

2. திரு.சிவகுமார் , மொபைல் எண் : 99866 30301

3. பிந்து, மொபைல் எண் : 99645 34667

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

580,Shubhakar,
44th cross, 1st A main road, Jayanagar 7th block,
Bangalore :


இதை முன்னுதராணமாக கொண்டு, இத்தகைய சமுகசேவைகளை செய்வதற்கு மற்ற நிறுவனங்களும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கும் முன்வரவேண்டும்.

’அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’

-மகாகவி பாரதியார்

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru