Friday, September 16, 2016

திருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி


"முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்"..

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.

திருப்புகழைப்பாடப் பாட வாய் மணக்கும் என்பதற்கு இணங்க, படிக்க,படிக்க உங்கள் மனதை முருகன் வயப்படுத்தும் வசிய சக்தி படைத்தது திருப்புகழ் தமிழ்.

பொதுவாக எந்த பக்தி இலக்கியமாக இருந்தாலும், பாடல்கள் இருக்கும். அடிக்கு அடி அதன் விளக்கங்கள் இருக்கும்.

பாடல்களை நாம் எப்படி பிரித்து, படிப்பது? எளிமையான வரிகளில் எப்படி பாடுவது? பொருள் அறிவது?

சமய இலக்கியத்தில் எனக்கு தெரிந்தவரை முதல்முறையாக வரிகளை சேர்த்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டு, எளிமையான ஒரு புதியபாதை படைத்து இருக்கிறார் புதுச்சேரியை சேர்ந்த திருமதி.மாலதி ஆறுமுகம்.

இந்த முயற்சிக்கு அவர் எடுத்துக்கொண்ட பக்தி இலக்கியம்..."திருப்புகழ்"

உதாரணத்திற்கு, திருப்புகழின் முதல் பாடலான விநாயகர் துதியை எடுத்துக்கொள்வோம்

"கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்"

சேர்த்து எழுதப்பட்டிருக்கும் இந்த பாடலை...

"கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
     கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

கற்றிடும்  அடியவர் புத்தியில் உறைபவ
     கற்பகம் என வினை ...... கடிதேகும்"

என்று எளிதாக பொருள்புரியும்படி எழுதி இருக்கிறார் திருமதி.மாலதி ஆறுமுகம்.

இவ்வாறு தொகுப்பபட்ட திருப்புகழ் பாடல்கள் மொத்தம் 122. ஒவ்வொரு பாடலுக்கும் விளக்க உரை அமைந்திருப்பதும் இதன் கூடுதல் சிறப்பு.

எளிமையான இனிய அனுபவம் தரும் இந்த புத்தகத்தை பெற, நீங்களும் அணுகலாம்.

திருமதி. மாலதி ஆறுமுகம்,
எண்.11, திருவள்ளுவர் வீதி,
விஸ்வ நாதன் நகர்,
முத்தையால்பேட்டை,
புதுச்சேரி - 03.
தொடர்பு எண்: 9894019099

-இன்பா

2 comments:

'பரிவை' சே.குமார் said...

புத்தக அறிமுகம் நன்று.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு அறிமுகம்...
புதிய முயற்சியை வாழ்த்துவோம்.

 
Follow @kadaitheru