Thursday, September 2, 2021

பூக்கள் பூக்கும் தருணம்



            மழை நின்றுவிட்டது. எங்கள் கல்லூரி வாசலில் இருக்கும் அடர்ந்த மரத்தின் அடியில் நான் காத்துக்கொண்டிருந்தேன்.

எப்படியாவது இன்று சங்கீதாவிடம் காதலை சொல்லிவிட வேண்டும்.

 

எப்படி சொல்வது? அவள் மனதை படிப்பது எப்படி?

 

அதோ! என்னை நோக்கி புன்னகைத்தபடி வரும் சங்கீதா.

 

அவள் கூந்தலுக்கு மட்டும்தான்...இரண்டு பக்கமும் பூக்கள்.

 

அவள் என்னை நெருங்க நெருங்க…எனக்குள் பதற்றம்.

 

'ஹாய்' என்று அவள் அருகில் வந்ததும் சட்டென்று மரத்தின் கிளைகளை பிடித்து உலுக்கினேன்.

 

இலைகளில் தங்கியிருந்த மழைத்துளிகள் படபடவென எங்கள் இருவர் மீதும் விழுந்தன.

 

"ஹேய் என்னப்பா இது" என்று அவள் கைகளை உயர்த்தினாள். 


செல்லக்கோபம்.

 

"சங்கீதா, ஐ லவ் யு".

 

 

                                                                                                                                                           -இன்பா

0 comments:

 
Follow @kadaitheru