Sunday, June 12, 2016

'வித்தையடி நானுனக்கு' - என் பார்வையில்


என் அருமை நண்பர் லாரன்ஸ் பிரபாகர் மூலமாக எனக்கு அறிமுகமானவர் திரு.செல்வகுமார் அவர்கள்.

செல்வகுமார் சாரை சில வருடங்களுக்கு முன் வடபழனியில் சந்தித்து இருக்கிறேன். "நான் இன்பா, இட்லிவடை வலைப்பதில் சண்டேனா இரண்டு எழுதுபவன்." என்று அறிமுகம் செய்துகொண்டு அவருடன் கலந்துரையாடியது மறக்கமுடியாத அனுபங்களில் ஒன்று.

வித்தையடி நானுக்கு பட ஸ்டில்களில் இருந்த அவர் பெயர் அந்த இனிய நினைவை கொண்டுவந்தது. அட,நம்ம செல்வா சார் என்று உரிமை கொண்டாட, நண்பர்களிடம் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தெரிந்தவர் என்று சொல்லவைத்தது.

நண்பரின் படத்தை எப்படி விமர்சிப்பது என்ற தயக்கமெல்லாம் எனக்கு இல்லை.

வித்தையடி நானுக்கு -  புதிய,வித்தியாசமான முயற்சி என்று சொல்வதற்கு இல்லை. இதைபோன்றதொரு ஐடியாவை பாலுமகேந்திரா அவர்கள் தனது "ஜூலி கணபதி" படத்தில் செய்து விட்டார்கள். 

அதில் தனது அபிமான எழுத்தாளரை சரிதா தனியாக ஒரு வீட்டில் அடைத்துவிடுவார். க்ளைமாக்சில் அதறக்கான காரணமும் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கும். வித்தையடி நானுக்கு படத்தில் இயக்குனர் நடிகையை அடைத்துவைக்கிறார்.

ஆனால் ஜூலிகணபதி படத்தில் இருக்கும் அழுத்தமும், அழகியலும் இதில் மிஸ்ஸிங்.  குறைந்த பட்ஜெட்டில் அழுத்தமான திரில்லர் என்பதற்க்கு மிகச்சரியான உதாரணம்,,,மெகாஹிட் கன்னட படமான "ரங்கிதாரங்கா".

வித்தையடி நானுக்கு - முதலில் பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டு பின்னர் அதற்கான கதையை உருவாக்கி இருக்கிறார்களோ என்று ஆரம்பத்தில் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் என்று விளம்பரம் செய்வதை தவிர்த்து இருக்கலாம் செல்வா சார். 

சவுரா சையத் நடிப்பு வெகு அருமை. ஷோபா, ரேவதி வரிசையில் ஒரு நடிக்க தெரிந்த நடிகை நமக்கு கிடைத்து இருக்கிறார். ராமனாதன் சார், தமிழ்சினிமாவுக்கு கிடைத்து இருக்கும் அருமையான ஒரு குண்சித்திர நடிகர்.

கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அளவு பார்த்து கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் விவேக் நாராயணன். இன்னும் அவரின் முழுமையான இசைத்திறமைகள் தெரியுமளவுக்கு படங்கள் அவருக்கு அமையவேண்டும். 

இன்றைய காலகட்டங்களில் படத்தை எடுப்பதைவிட, அதை திரைஅரங்குகளில் ரிலிஸ் செய்வது ஒரு மிகப்பெரிய சாதனை. அதுவும் பெரிய நட்ச்சத்திரங்கள் இல்லாமல், எளியமுறையில், புதுமுகங்களை வைத்து படம் எடுத்து அதை வெளியிடுவது......கிரெட் டீம் வொர்க்.

செல்வா சாருக்கு என் பூங்கொத்து.

இன்னும்...இன்னும்...இன்னும்.... நிறைய எதிர்பார்க்கிறோம் செல்வா சார், ராமனாதன் சார் அண்ட் விவேக் சார்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru