Tuesday, October 13, 2015

வேதாளம் - திரை விமர்சனம் - First on Net

முழுத்திரைக்கதையையும் பிரித்து எழுதிவிட்டால் உங்களுக்கு படம் பார்க்கும் சுவாரசியம் இருக்காது என்பதால், நேரடியாக கதைச்சுருக்கத்தை மட்டும் இங்கே தந்து இருக்கிறேன், மற்றவை வெள்ளித்திரையில் காண்க.


வேதாளம் - யெஸ், அஜித்துக்கு இரட்டை வேடங்கள்.

முதலில், கார் டிரைவர் அஜித், பரம சாது. தங்கை லெட்சுமிமேனன் மீது அதிகபாசம் கொண்டவர். ஏழை மாணவியான லெட்சுமிமேனனுக்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் 'ஸ்காலர்ஷிப்' அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்க்காக தங்கையுடன் கொல்கத்தாவுக்கு குடிபெயருகிறார் அஜித்.



அங்கே, அவர்கள் வசிக்கும் பகுதியை சர்வேத அளவில் கடத்தல் உடபட பல குற்றங்களை செய்யும் கபீர்சிங், தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.
லெட்சுமிமேன்னின் கல்லூரித்தோழியாக  வரும் ஸ்ருதிஹாசன், அஜித்தை ஒருதலையாக காதலிக்க தொடங்குகிறார்.



இதற்கு இடையே,  ஒரு மோதல் சம்பவத்தால் அஜித் ஒட்டும் கால்டாக்சியில் கபீர்சிங்கின் ஆட்கள் போதைமருந்தை வைக்க,  அதை போலீசிடம் ஒப்படைக்கிறார் அப்பாவி அஜித்.

விவகாரம் மீடியா மூலம் பெரிதாகி, கபீர்சிங்கின் ஆட்களை கைது செய்கிறது போலீஸ்.


கபீர்சிங்கின் கவனம் அஜித் மீதும், லெட்சுமிமேனன் மீதும் திரும்புகிறது.. தொடரும் தாக்குதல் சம்பங்களில் லெட்சுமேனன் கொல்லப்பட, அஜித்தால் நடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

ஸ்ருதிஹாசன், அஜித்தை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறார்.

அங்கே மருத்துவமனையில் வீபரீத அனுபவங்கள் அஜித்துக்கு ஏற்படுகிறது. அவர் ஒரு 'ஆவி' யை சந்திக்கிறார். அது...அஜித் 'நெம்பர் டு'.


முதல் அஜித்துக்கு நேர்மாறாக, அடாவடி கெத்து அஜித். அவரது நண்பர்கள் சூரி மற்றும் அஸ்வின் காக்கமானு. ஊரில் பெரும் புள்ளியான பார்வையற்ற தம்பிராமையாவை பாதுக்காகிறது இந்த அணி,

தம்பிராமையாவின் சொத்துக்களை குறிவைக்கும் எதிரிகள் 'கெத்து' இருக்கும் வரை அவரை நெருங்கமுடியாது என உணர்ந்து, 'கெத்து' அஜித்தின் நெருக்கமான நண்பரான அஸ்வினை துரோகியாக்கி, அஜித்தை கொடுரமாக வீழ்த்துகிறார்கள்.

ஆவி அஜித்தின் கதையை கேட்டு, முதலில் அவருக்கு உதவ முடிவு எடுக்கிறார் அஜித்.

சாது அஜித்தின் உடலுக்குள் கெத்து அஜித்தின் ஆவி புகுந்து கொள்ள, அப்புறம் என்ன பரபர பழிவாங்கும் படலம்தான்.

முதலில் லோக்கல் எதிரிகளை முடித்துவிட்டு, கொல்காத்தா, தாய்லாந்து என பறக்கிறார்கள் அஜித்(கள்). 'வேதாள வேட்டை' எப்படி என்பதே மீதிக்கதை.


சாதா அஜித் பழிவாங்கினாலே அதிரும். அதுவும் அமானுஷ்ய சக்திகள் படைத்த ஆவி அதாங்க 'வேதாள' அஜித் பழிவாங்கினால்...கேட்கவும்  வேண்டுமா...வீஷுவல் டிரீட்டை.

கெத்து அஜித், தல ரசிகர்களுக்கான ஸ்பெஷல் என்றால், தங்கை சென்டிமெண்ட், காதல் என்று வாழும் அமைதி அஜித் எல்லாருக்குமான கெட்டப்.

எல்லா எதிரிகளையும் 'முடித்த' பின், அவ்வளவுதான் ஸ்ருதிஹாசனோடு செட்டில் ஆகிவிடலாம் என அஜித் நினைக்கும்போது மீண்டும் வருகிறது வேதாளம், வேறு ஒரு அசைன்மெண்டுக்கு. மீண்டும்.......ஆரம்பம்.



சுருங்க சொன்னால்,நமக்கு மிகவும் பரிச்சயமான விக்கரமாதித்யன் - வேதாளம் கதையை, பக்கா கமர்ஷியல் சினிமாவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சிவா. இதில் விக்கரமாதித்யன் - வேதாளம் இருவருமே அஜித்.

மொத்ததில், வேதாளம் - தீபாவளித் திரைவிருந்து, 'தல' வாழையில்.


(குறிப்பு: மேலே சொன்ன 'கதை'யின் உரிமை எங்களுக்கு மட்டுமே சொந்தம். All copy rights Reserved)

-இன்பா

3 comments:

Anonymous said...

athu eppadi ungalala mattum mudiyuthu??

Anonymous said...

Story padu mokke.appo intha deepavali Vijay fanskku sema virundhu

Anonymous said...

Hi Anonymous... Virundhu eppadi Puli polava....

 
Follow @kadaitheru