Sunday, February 3, 2013

புடவைக்குள் ஒரு பூங்கொத்து



 
நீ
புடவை கட்டும்பொதுதான்
புரிந்தது
நீயொரு
பூங்கொத்து என்பது.

மூன்று பூக்கள்
மொத்தம் உன்னில்.

கண்ணுக்கு தெரியும்
முகமொரு
பூ.

ஆடையில்
மறைந்திருக்கும்
மற்ற பூக்கள் இரண்டு.

இத்துடன்
கணக்கில் வராமல்
இரவில் மலரும்
இன்னொரு பூவும்
உன்னிடம் உண்டு.

முகப்பூவில் மணம் அதிகம்.
மற்றதில் அதிகமிருப்பது
சுவை

உதிர்வதும் இல்லை.
வாடுவதும் இல்லை.
பறிக்கவும் முடிவதில்லை
உனக்கே உரித்தான
உன் மலர்களை.

உன் கூந்தல் பூக்களும்
செயற்கையாய் தோன்றுகின்றன
உன் பூக்களுக்கு முன்.
செடியிலிருந்து
பறிக்கப்பட்டதால்.

நீ
நடக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உன்
தலையிலிருந்து
உன் மார்பு(பூ)கள்
மீது விழுந்து
உன் காலடியில்
தற்கொலை
செய்துகொள்கின்றன
உன் கூந்தல் பூக்கள்.
 

கவிதை : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru