Monday, February 25, 2013

ஜென் - ஒரு கவிதை,ஒரு கதை,ஒரு விதை

கவிதை :

நதிக்கரை மணலில் மரங்களின் நிழலில்
நறுமணம் கமழும் புல்வெளிகளிலே
மலைச்சாரல்களின் சரிவில் கூட
மாட்டின் காலடிச்சுவடுகள் கண்டேன்.

சொர்க்கம் நோக்கி செல்வதுபோல கண்டேன்.
சுவடுகள் சற்றே சாய்த்து தெரிந்தன,

எனது எருதின் குளம்படியல்லவா
எனக்கு தெரியாமல் போகுமா....என்ன?

கதை :  நாம் நடந்து செல்லும் பாதையை, நமது காலடிச்சுவடுகள் மூலம் அந்த வழி நல்ல வழியா? அல்லதா? என பிறர் அரிய வாய்ப்பு உண்டு.

நமக்கு நம் வழி பற்றி நன்றாக தெரியும். நன்றாக இருப்பின் நிச்சயம் அது செர்க்கம் நோக்கி செல்லும்.

விதை : எத்துயர்வரினும் நாம் நல்வழி செல்வோம்.


பதிவு :  ஆ.சிதம்பர குருநாதன், திருச்செந்தூர்.

(கடை(த்)தெருவின் விருந்தினர்).

0 comments:

 
Follow @kadaitheru