Saturday, October 25, 2014

முதுகில் குத்திய முருகதாஸ்

சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். குமுதத்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா மூலம் அறிமுகமானார் கோபி.

அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. 

திரைப்படக்கதை மற்றும் இயக்கம் பற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கு வந்தாரானால் மணிக்கக்கில் விவாதம் நீளும். அப்படித்தான் தண்ணீருக்கான அரசியல், பன்னாட்டு பெரு முதலாளிகளின் பங்கு என்ற விதத்தையும் விவரித்தார். அவரது பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து. எப்படி என்றால் திரைக்கதையாகவே. முற்போக்கு சிந்தனையோடு இப்படி மக்கள் பிரச்சனையை அனுகும் விதம் சினிமாவில் குறைவு.

இப்படியான சந்திப்பின் போதுதான் ஒரு நாள் எனக்கும் அவருக்குமான ‘எடக்கு முடக்கான’ கதையும் நடந்தது.

“காவிரி தண்ணீர் பிரச்சனை என்றால் தஞ்சை விவசாயி மட்டும்தானே போராடுறான். அங்கிருந்து கொஞ்சம் விவசாயிகள் சென்னை வந்து நம்ப கண்ணு முன்னதான் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு நடத்துறான். இதை சென்னை வாசிகள் வேடிக்கை பார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்று போகிறானே ஏன். தண்ணீர் கஷ்டம் பற்றி அவனுக்கு தெரியல. தெரியனும்னா என்ன செய்யனும் வீராணம் குழாய உடைக்கனும். பூண்டி நீர்தேக்கத்தை முடக்கனும். அதுவும் விவசாயிகளே செய்யனும். நமக்கு சோறு போடுற விவசாயிகளோட கஷ்டம் அப்பதான் இந்த நகரவாசிகளுக்கு புரியும். ரெண்டு நாள்..இரண்டே இரண்டு நாள், குடிக்கவும் குடிநீர் இல்லாம தவிச்சானா, காவிரி நதிநீர் பிரச்சனையும், தஞ்சை விவசாகிளோட போராட்டத்தையும் புரிஞ்சுக்குவான் இல்ல” என்று கோபி உணர்ச்சிவசப்பட்டு பேச, அது தீவிரவாதமில்லையா என்று நான் கூற, காவல்துறையை ஏவி மக்களை தாக்குவது என்ன புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா என்று அவர் கேட்க கடைசியில் கரடுமுரடா முடிந்தது.

பிறகு ஒரு நாள் வந்தார். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் இந்த கதையை பற்றி சொன்னதாக கூறினார். இன்னும் சில மாதம் கழித்து சந்தித்தபோது, ஷாட் பை ஷாட்டாக சொல்லி விவாதித்துள்ளேன். படத்தை அவர் தயாரிப்பதாகவும், நான் இயக்குவதாகவும் திட்டம் என்றார். மகிழ்ச்சி, தீவிர உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும் என்றேன்.

அடுத்த ஓரிரு மாதம் கழித்து சந்தித்த போது ‘தினமும் முருகதாஸிடம் கதை விவாதம் நடப்பதாக சொல்கிறீர். முன்பணம் ஏதாகிலும் கொடுத்தாரா. அல்லது செலவுக்கு ஏதேனும் தந்ததாரா என்றேன். நக்கலாக சிரித்துவிட்டு ‘இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூரு ரூபாய் மட்டும் கொடுத்தார். அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார் என்றார் வேதனையோடு.

இப்படி ஒன்னறை வருடமாக சிரமப்பட்டு போய் கதைசொல்லி விவாதித்து முடிந்த படம்தான் இன்றைய ‘கத்தி’ திரைப்படம்.

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே ‘சொந்தமா யோசிச்சு’ எடுத்த படம்.
போகட்டும்.இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்
நண்பர் கோபி.

இவருடைய கதை ஸ்கிரிப்ட், ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கு சொதப்பலானது. காரணம் வேற.இப்போது மீண்டும் புதிய வழக்கறிஞரை பிடித்து..மீண்டும் வழக்கு போட்டிருக்கிறார்.

ஆனால் நண்பர் கோபி நீதிமன்றத்தில் கதையை கொடுத்ததை போல தைரியமாக எதிர் தரப்பு கொடுக்கவில்லை. உதவாத காரணங்களை சொன்னது.

இப்போது படத்தை பார்த்துவிட்டு கோபி கதறுகிறார். ஒவ்வொரு காட்சியும் நான் சொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனைகூட, பூண்டி நீர் தேக்கத்தை முடக்கனும், வீராணம் குடிநீர் குழாயை மூடனும் என்று சொன்னதைகூட எடுத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமும் அப்படியே இருக்கு என்று புலம்புகிறார்.

பணபலம், அதிகார பலம், செல்வாக்கு எல்லாம் ‘எப்போதும் ஏற்றமாகவே’ இருந்துவிடுமா என்ன ? மீண்டும் வழக்கு தொடர்கிறது.

இந்தமுறை தாஸுக்கு தாவு தீர்ந்துவிடும் என்கிறார்கள். பார்ப்போம்.

பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.

நன்றி -பா. ஏகலைவன்

0 comments:

 
Follow @kadaitheru