Tuesday, December 31, 2013

நம்மாழ்வார் - மண்ணுக்கு அஜீரணம்.

இதுவரை
இயற்கை
பல பேரழிவுகளை
நிகழ்த்தி இருக்கிறது.
இப்போது
இயற்கை ஒரு பேரழிவை
சந்தித்து  இருக்கிறது.

இனி,
வயல்வெளிகளுக்கு
வழிமொழிய
வாயில்லை.

ஐயோ!.
இருக்கும்
கொஞ்சநஞ்ச
மரங்களும்
தற்கொலைக்கு
தயாராகுமே.

தமிழ்நாட்டில்
மிச்சமிருக்கும்
விவசாயமும்
'கான்கிரிட் பயிரு'க்கு
மாறிவிடுமே.

ஐயாவின் மரணம்
மண்ணுக்கு அஜீரணம்.

இனிவரும்
சமூகம்
இயற்கை வேளாண்மைக்கு
மாறும்வரை..

சாந்தி அடையாது
(நம்)ஆழ்வாரின் ஆன்மா.


இரங்கல் - இன்பா

2 comments:

Anonymous said...

priceless soul. No one can fill his place

Anonymous said...

huge loss to tamilnadu and india

 
Follow @kadaitheru