Friday, October 25, 2013

எங்கே போனாய் தாவணியே....



எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.

கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.

வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.

இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
குறிப்பாக
உனக்கு தொடர்ந்து
வாய்ப்பளிக்கும்
சிங்கம் ஹரிக்கு
நன்றி சொல்வாய்...

தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...

-இன்பா..


1 comments:

Anonymous said...

athe pola thavaniku uyir koduthukondirunga "Ramarajan" Directorum kanama poitareeeeee

 
Follow @kadaitheru