Wednesday, February 3, 2016

கெயில் - கொலைவாளினை எடுப்போம்


தமிழகத்தின், ஏழு மாவட்டங்கள் வழியாக, 'கெய்ல்' எனப்படும், 'காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' பொது துறை நிறுவனம் சார்பில், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

                                               -செய்தி


காவிரி மற்றும் முல்லை பெரியாறில் தண்ணீர் வழங்க மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவும், கெய்ல் வழக்கில், தமிழக விவசாயிகளுக்கு பாதகமாகவும்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

-அய்யாக்கண்ணு, தேசிய தென் மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்









எரிவாயு மட்டுமல்ல
தமிழகத்தின் பிராணவாயுவையும்
கொண்டுபோகும்
கெயில் திட்டம்.

விளை நிலங்களை
விலை நிலங்களாககூட
விற்க இயலாமல்
மலட்டுமேடுகளாக்க
துணைபோகும் சட்டம்.

விவசாயத்தின் நரம்புகளை
அறுக்கபோகின்றன
ராடசத குழாய்கள்.

நாட்டை ஆள்வதோடு
நீதிமன்றத்தையும்
நிர்வகிக்கும்
தனியார் நிறுவனங்கள்.

ஒரு மாநிலத்தை பலியாக்கி
இரு மாநிலங்களை வாழவைக்கும்
ப(பி)ண நாயகம்
இந்திய சனநாயகம்.

வேடிக்கை பார்க்கும்
சனங்களும்
வெட்டிக்கதை பேசும்
அரசியல்வாதிகளும்
இருக்கும்வரை

தமிழ் நாட்டிற்க்கு
துரோகங்கள் தொடர்கதை.

மீண்டும்..மீண்டும்
சாந்தி அடையாமல்
தவிக்ககிறதே
நம்மாழ்வாரின் ஆன்மா.

உச்சநீதிமன்ற தீர்ப்பை
துச்சமென ம(மி)திப்போம்.

கோரிக்கைகளை விடுத்து
கொலைவாளினை எடுப்போம்.

-இன்பா

 
Follow @kadaitheru