Sunday, March 9, 2014

'கோச்சடையான்' இசை - 'காப்பி'யரசு வைரமுத்து



என்னதான் 'ரஜினி' படம்,மோஷன் பிக்சர் என்று சொன்னாலும், கோச்சடையானை பொருத்தவரை சூப்பர்ஸ்டாரின் "டூப்" நடித்த படம் போன்றதொரு உண்ரவு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

பாடல்கள் பற்றிய 'டீடெய்லு'க்கு, பதிவுடன் இருக்கும் படத்தை 'கிளிக்'கவும்.

ஏ.ஆர்.ரகுமானுக்கும் இதே உணர்வு இருந்திருக்காலாம் என்பது படத்தின் பாடல்களை கேட்டும்போது தோன்றுகிறது.அவர் பாடி இருக்கும் "கர்ம வீரன்"  படத்திலே சிறந்த பாடல்.

ரஜினி சென் டிமெண்ட்படி முதல்பாடலான "எங்கே போகுதோ வானம்", எஸ்.பி.பி பாடி இருக்கிறார்.

மற்ற பாடல்களில் வைரமுத்து, தனக்கு வயதாகிவிட்டது என்று நிருபிக்கிறார்.

எதிரிகளை ஒலி(ழி??)க்க, எத்தனையோ வளி(ழி??)கள் உண்டு என்று தலைவரின் குரலில்(தமிழ் வாள்க) தொடங்கும் பாடல், "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" பாடல் தேவலாம்.

உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால்,  'இதயம்' பாடலை கேட்கலாம்.

கார்ட்டுன் டைப் படம் என்பதால், குழந்தைகளுக்கு பிடித்தால்போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். இன்றைய குழந்தைகளுக்கு 'உன் உச்சி மண்டையில' டைப் குத்து பாடல்கள்தான் பிடிக்கும் என்பது ரகுமானுக்கு தெரியவாய்ப்பில்லை.

இதுபோன்ற சப்ஜெக்டுக்கு, ராஜா சார்தான் மிகப் பொருத்தம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

"பார்ம் அவுட்"டான வைரமுத்துவை பெரிதும் நம்பிவிட்டார் ரகுமான்.

எல்லா பாடல்களிலும் ஏற்கனவேதான் பயன்படுத்திய வரிகளையும், "மாசில் வீணையும்" என்று அப்பர் போன்ற புலவர்களிடம் இருந்து 'சுட்ட' வரிகளையும் வைத்து 'ஒப்பேத்தி' ஒருக்கிறார் (முன்னாள்) கவியரசு.

'காப்பி' யரசு வைரமுத்து என்று பெயர் வைக்கலாம்.

மொத்ததில், கோச்சடையான் பாடல்கள், சிலருக்கு 'கிளாஸ்' போல தோன்றலாம். ஆனால், நிச்சயம்,நாம் சூப்பர் ஸ்டாரிடம் எதிர்பார்க்கும் 'மாஸ்' இல்லை.


1 comments:

Anonymous said...

wait for the superflop of the year

 
Follow @kadaitheru