Wednesday, May 4, 2016

"கபாலி" படத்தின் கதை - Exclusive FIR


சென்னையில் தனிமையில் வசிக்கும் தொழிலதிபர் கபாலிஷ்வரன். அவரது தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர் தெய்வம்,

ஒரு நாள் அவருக்கு கருத்துவேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக அவரை பிரிந்து மலேசியாவில் வாழும் அவரது மனைவி ராதிகா ஆப்தேயிடம் இருந்து போன் வருகிறது. மகள் தனிஷிகாவுக்கு திருமணம். தந்தை என் கிற முறையில் அதில் கலந்துகொள்ளவதற்க்காக கோலாலம்பூர் செல்கிறார் கபாலி. அங்கே மணமகன் கலையரசனையும் சந்திக்கிறார்.



மறுபடியும் மனைவி,மகள் என இணையும் தருணத்தில், திருமணத்திற்க்கு முதல் நாள் ஒரு மர்மகும்பல் காபாலி இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்த, அதில் ராதிகா ஆப்தே கொடுரமாக கொலை செய்யபடுகிறார். மகள் தனிஷிகா கோமா நிலைக்கு செல்கிறார்.

கபாலி இதற்க்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க புறப்படுகிறார். அவருக்கு பக்கபலமாக கூடவே மகளின் காதலனான கலையரசன்.

காபாலியின் ப்ளாஷ்பேக்.

முப்பது வருடங்களுக்கு முன் மலேசியாவை ஆட்டிப்படைக்கும் தாதா காபாலி மற்றும் அவரது நண்பன் கம் பார்ட்னர் கிஷோர்.

காபாலியை கண்டு காதலில் விழுகிறார் ராதிகா ஆப்தே. இந்த காதல் காரணமாக கபாலிக்கும், கிஷோருக்கும் பிளவு ஏற்படுகிறது, ராதிகாவுடன் திருமணம்,குழந்தை என மாறும் குடும்ப வாழ்க்கையில் இறங்கும் காபாலி, தாதா தொழிலைவிட்டு விலக முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில், மலேசிய போலிசிடம் கிஷோர் சிக்கிகொள்ள, அவரது ஆட்கள் காபாலி காட்டிகொடுத்துவிட்டார் என்று அவரை அழிக்க புறப்படுகிறது.

தன்னால் தன் குடும்பத்திற்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதென்று, மனைவி,மகளை பிரிந்து சென்னைக்கு வந்துவிடுகிறார் காபாலி.


இத்தனை வருடங்களாக தனக்காக காத்திருந்து, தன் கண்முன்னே குடும்பத்தை கிஷோர் சீர்குலைத்துவிட்டதாக முடிவெடுத்த காபாலி, அவரை தேடி புறப்படுகிறார். இந்த வேட்டையில் மலேசியாவில் உள்ள வேறு சில தாதா கோஷ்டிகளுடன் அவர் மோத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது


தடைகளை தகர்த்து, எதிரி கிஷோரை நெருங்கும்பொது, அதிரடி திருப்பமாக மனைவியை கொலை செய்து மகளை படுத்தபடுக்கையில் ஆக்கியது கிஷோர் இல்லை, தன் கூடவே இருக்கும் கலையரசன் மற்றும் அவரது தந்தை என்ற உண்மை காபாலிக்கு தெரியவருகிறது,

அதன் பிண்ணனி என்ன? மகள் பிழைத்தாரா? காபாலி என்ன செய்தார்? போன்ற கேள்விகளுக்கு பரபரவென பதில் அளிக்கிறது பட்த்தின் க்ளைமாக்ஸ்.

இதுவரை சூப்பர்ஸடார் படமாக பழிவாங்கல், மாஸ், பன்ச்  வசனம், ஆக் ஷன் என்று  செல்லும் காபாலி, கடைசி பத்து நிமிடத்தில் மட்டும் மெட்றாஸ் ரஞ்சித் படமாக, ஒரு சமூக கருத்துடன் முடிவடைகிறது,



மொத்ததில் கபாலி - நிறைய மாஸ், கொஞ்சம் க்ளாஸ்

(கதை(!?!) - இன்பா)

0 comments:

 
Follow @kadaitheru