Saturday, June 18, 2011

எதிர்பார்க்க வைக்கும் "உதயன்"


ஒரு காதல் கதைக்கு எது முக்கியம்?

முதலில் இளமையான இசை, இரண்டாவதாக அதைவிட இளமையாய் ஒரு கதாநாயகி. குறிப்பாக 'ப்ரெஷ்' புதியமுகம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமைந்து இருக்கின்றன..."உதயன்" படத்திற்கு.

அறிமுகமான தெலுங்கு படத்தில் சுமாராக தெரிந்த புதிய நாயகி பிரணிதாதான் "உதயன்" படத்திற்கு தற்போது "மாஸ் அட்ராக்க்ஷன்".

படத்தின் இசை அமைப்பாளர் , டுயட் படத்தின் ஏ.ஆர்.ரகுமானுக்கு "சாக்ஸபோன்" இசைத்த இசை மேதை அமரர் கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் மணிகாந்த் கத்ரி. ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடுத்த இடத்தில் வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சிறுவயதில் ஆசிப் அலி மற்றும் மங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் மராத்தே ஆகியோரிடம் இசை பயின்ற மணிகாந்த், தனது தந்தை கோபால்நாத்துடன், சாக்ஸபோன் கச்சேரிகளில் தவறாமல் பங்கு பெற்றார். 'Dream Journey' என்கிற ஆல்பத்தை முழுக்க முழுக்க சாக்ஸ போன் இசை கருவியில் இசை அமைத்து வெளியிட்டு இருக்கிறார்.

"மெலடி பாடல்கள் மனித உடம்பில் ஓடும் ரத்தம் போன்றது" என்று கூறும் மணிகாந்த், மெலடி பாடல்கள்தான் தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்.தனது தந்தையின் வழிகாட்டுதல்படி, புதுப்புது ராகங்களை உருவாக்கி இருப்பதாக கூறும் மணிகாந்த்,இசைக்கும் தனக்குமான தொடர்பை " Music is my living. It is an ocean the more you learn the more it generates" என்கிறார்.

ஏற்கனவே மணிகாந்த், கன்னட படத்தில் இசை அமைப்பாளாராக அறிமுகம் ஆகி விட்டாலும், அவர்க்கு மிகவும் பிடித்தமான தமிழில் இவருக்கு "உதயன்" தான் முதல் என்ட்ரி.

"உதயன்" படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.

1. "எவன் இவன் இவன் ரகசிய காதலன்" - சுருதி ஹாசனுக்கே உரித்தான 'கிக்'கான குரலில் ஒரு 'ஜில்' பாடல். ஒரு காதலி , தன் காதலனை பற்றி பாடுவதான சிச்சுவேஷன்.
இந்த பாடலை எழுதி இருப்பவர் புதிய கவிஞர் சூர்யா.

கல்லூரி மாணவிகளின் 'சாய்ஸ்' ஆக இருக்கபோகும் பாடல்.

2.ரிங் டிங் டிங் - ஒரு புதுமையான பாடல். ராப் பாணியில், பிரபல இந்தி பாப் பாடகர் பாபா ஷேகல், சுசித்ரா பாடியிருக்கும், முத்தமிழ் என்கிற கவிஞர் எழுதி இருக்கும் பாடல். உற்சாக துள்ளலான இசை.

3."இத்தனை யுகமாய் எங்கிருந்தாய்" - மெலடி பாடல்களின் இளவரசன் கார்த்தி பாடி இருக்கும் பாடல். அண்ணாமலை என்கிற கவிஞரின் காதல் வரிகள்.

கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் என்பதை பின்னணி இசையில் நிருபிக்கிறார். அதற்க்கு ஏற்றார்போல, "இதயம் வெள்ளை காகிதம், நீ இங்கே ஓவியம்" என்கிற அழகான கவிதை வரிகள்.

மனதை தொடும் மெலடி இசை.

4."லக்கா, லக்கா" - படத்தில் இருக்கும் ஒரே ஒரு குத்து பாடல். யுகபாரதி எழுதி இருக்கிறார். பிரசன்னா மற்றும் தர்ஷனா கார்த்திக் பாடி இருக்கிறார்கள். சுமார் ரகம்

5. " உதித்தான் புது சூரியனாய் இந்த உதயன்" - ஹீரோயிசம் பொங்கும் பாடல். படத்தின் இசை அமைப்பாளர் மணிகாந்த் கத்ரி பாடி இருக்கும் பாடல். இந்த பாடலை மட்டும் எழுதி இருப்பவர் இளமைகவிஞர்(?) வாலி.

அதிரடியான பாடல், அதற்க்கு பொருத்தமான புதிய குரல் மணிகாந்துக்கு.

6."பொங்க வச்சோம், அய்யனாரே" - படத்தில் மிகவும் சர்பிரைசான கிராமத்து பாடல். யுகபாரதி எழுதி இருக்கும் இந்த பாடலை பாடி இருப்பவர்கள் விவேக் நாராயணன் மற்றும் திவ்யா.

அதிரடியான கிராமத்து இசை. எந்த வகையான பாடலுக்கும் இவரால் இசை அமைக்கமுடியும் என்று மணிகாந்த் மீது நம்பிக்கை வருகிறது.


"பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார் " என்கிறார் தனது முதல் படமான "உதயன்" பற்றி, இயக்குனர் சாப்ளின்.

பார்த்த உடனே பத்திக்க வைக்கும் பிரணிதா, இளமை துள்ளலான மணிகாந்தின்
இசை என எதிர்பார்க்க வைக்கிறான்..."உதயன்".

படத்தின் ஹீரோவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்பவர்களுக்கு,அவர் 'வம்சம்' அருள்நிதி ஸ்டாலின்...அட விடுங்க, அவரா முக்கியம்???

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru