"அரவான்" - இது வசந்த பாலனின் அடுத்த படம். மதராசபட்டினம் வெற்றியை தொடர்ந்து நாம் பல சரித்திரபாணி படங்களை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அரவானும் அப்படி ஒரு சரித்திர பின்னணியில் உருவாக்கபடும் படம்தான்.
இந்த படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதி, இலக்கியத்தில் இருந்து சினிமாவுக்கு அடிஎடுத்து வைத்து இருக்கிறார் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன் இது வரை எழுதி இருப்பது ஒரே ஒரு நாவல் மட்டுமே. அதன் பெயர் "காவல் கோட்டம்".
"இந்த நாவலை வைத்து படம் எடுக்க திரு.வசந்தபாலன் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ஆறு மாதங்கள் விவாதத்துக்கு பின்னர் நாவலின் திரைவடிவத்தை நானும்,வசந்தபாலனும் உருவாக்கினோம்" என்கிறார் சு.வெங்கடேசன்.
"அரவானில் முற்றிலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் சவால் இருந்தது. ஆனால், இலக்கிய பரிச்சயமும், ஏற்க்கனெவே ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுடன் பணிபுரிந்த இயக்குனர்வசந்தபாலனுடன்பணிபுரிவதில் எந்தவொரு முரண்பாடும் வரவில்லை " என்றும் கூறுகிறார் சு.வெங்கடேசன்.
இந்த நாவலை எழுதும்போதே, காட்சிவடிவங்களை முன்னிருத்தியே எழுதியதாகவும், அதனால், அதை சினிமாவுக்கான கதையாக உருவாக்கும் போது, தனக்கு சிரமங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மகாபாரதத்தில்,குருஷேத்திர யுத்தத்தின் போது, பாண்டவர்களுக்காக காளி கோவிலுக்கு நரபலி இடப்பட்டவரின்தான், அர்ஜுனனின் மகனான அரவான்.ஆணும் பெண்ணும் அல்லாத இன்று நாம் திருநங்கை என்று அழைக்கும் ஒரு அரவானை பற்றிய கதை இது என்கிறார் வசந்த பாலன்.
அரவான் படத்தின் கதை :
சுமார் 600 வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த சில வரலாற்று நிகழ்வுகளை பற்றி பேசுகிறது அரவான். மொகலாய அரசன் ஒவுரங்கசீப்பின் படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையை கைப்பற்றியதும், மதுரை முழுவதும் ஒரு பொதுவான பாதுகாப்பு முறையை உருவாக்க முடிவு செய்தான். மாலிக்காபுரும் ஒரு அரவாணி அல்லது திருநங்கை என்பதால், தன்னை போல உள்ள அரவான்களை கொண்டு ஒரு தனிப்படையை உருவாக்கி, அவர்களையே மதுரையின் பாதுகாப்பு அரண்களாக உருவாக்கினான்.
1000 பக்கங்களை கொண்ட 'காவல் கோட்டம்' நாவல் இந்த அரவான்களின் வரலாற்றை பற்றி பேசுகிறது. நாவல் வெளியான ஒரு வருடத்தில், வசந்தபாலனால் கவனம் பெற்று படமாக உருவாகபோகிறது.
யாக இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.அரவான் - தமிழ் சினிமாவின் மீது நமக்கு ஒரு புதிய நம்பிக்கையை தரும் படமாக இருக்கும் என நம்பலாம்.
(நன்றி : தி இந்து).
-இன்பா









